விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சால்ட் ரோடு பகுதியில் கௌரி என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது. இவர் தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் வசித்து வருவதால், அந்த இடத்தில் சோலார் மின்வேலி அமைத்தார்.
அந்த மின்வேலிக்கு அருகில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அங்குள்ள சிறுவர்கள் மின்வேலிக்கு அருகாமையில் விளையாடுகின்றனர்.
மேலும் அங்கு தனியார் பள்ளி ஒன்று உள்ளது. எனவே அந்த மின்வேலியால் உயிரிழப்பு ஏற்படும் என பொதுமக்கள் அச்சுகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் ஆகியோரிடம் மனுக்கள் அளித்தனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் அந்த மின்வேலியை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆற்றின் குறுக்கே மின்வேலி -தத்தளிக்கும் காட்டு யானைகள்