ETV Bharat / state

சைபர் குற்ற புகார்களுக்கு 1930க்கு அழைக்கவும்... விழுப்புரம் சைபர் க்ரைம் போலீசார் அறிவுறுத்தல்!

author img

By

Published : Dec 8, 2022, 9:40 PM IST

Cyber
Cyber

விழுப்புரம் மாவட்டத்தில் சைபர்‌ குற்றங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி சைபர் குற்றப்பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர். சைபர் குற்றங்கள் குறித்து புகார் தெரிவிக்க 1930 என்ற இலவச உதவி எண்ணை அழைக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில், "சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு அளிக்கும்போதும், சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து, பொதுமக்கள் தங்களது பணத்தை இழந்து வருகின்றனர். அடையாளம் தெரியாத நபர்கள் செல்போன், இணையம் வாயிலாக மக்களை ஏமாற்றி, பணத்தைப் பறித்துவிடுகிறார்கள்.

இதுபோன்ற சைபர் குற்றங்கள் நடக்கும்போது, உடனடியாக பொதுமக்கள் 1930 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொண்டு, உடனே புகார் தெரிவித்தால், இழந்த பணத்தை மீட்க நடவடிக்கை எடுப்போம். தாமதமாக புகார் கொடுக்கும் பட்சத்தில் இழந்த பணத்தை மீட்பது கடினம்.

மக்களின் விழிப்புணர்வுக்காக இந்திய அரசு இணைய வலைதளங்களில் இதுவரை பதிவான சைபர் குற்றவாளிகளின் தொலைபேசி எண், வங்கி கணக்கு எண் ஆகியவற்றை சேமித்து வைத்துள்ளது. எனவே, சந்தேகப்படும்படியாக யாரேனும் தொடர்பு கொண்டால், அவர்களது செல்போன் எண், வங்கி எண் ஆகியவற்றை வலைத் தளத்தில் ஒருமுறை சோதித்து பார்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னை வந்த விமானத்தில் சஹாரா நரிகள் கடத்தல்.. குருவி கூறிய பலே காரணம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.