ETV Bharat / state

தோளப்பள்ளி ஊராட்சி தலைவர் பதவிக்கு போலி சாதி சான்றிதழ் கொடுத்து வெற்றி பெற்றது நிரூபனம்!

author img

By

Published : Apr 16, 2022, 10:17 PM IST

தோளப்பள்ளி ஊராட்சி
தோளப்பள்ளி ஊராட்சி

வேலூர் தோளப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற பெண், போலியான சாதி சான்றிதழ் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது விவாரணையில் நிரூபனமாகியுள்ளது.

வேலூர்: தமிழ்நாட்டில் புதியதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்டமும் அடங்கும். இந்நிலையில் வேலூர் மாவட்டம் அணைகட்டு ஒன்றியத்துக்குட்பட்ட தோளப்பள்ளி ஊராட்சியில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட கல்பனா சுரேஷ் என்பவர் 609 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று தலைவராக உள்ளார்.

தோளப்பள்ளி ஊராட்சி இம்முறை ஆதிதிராவிடர் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தலைவராக வெற்றி பெற்றுள்ள கல்பனா சுரேஷ் மாற்று சமுகத்தைச் சேர்ந்தவர் என்றும் தேர்தல் வேட்புமனுவில் போலியான ஆதிதிராவிடர் (SC) சாதி சான்றிதழை கொடுத்து வெற்றி பெற்றுள்ளதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக தோளப்பள்ளி ஊராட்சியில் அதே தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாக்கியராஜ் என்பவர் மாவட்ட நிர்வாகத்திற்கு அளித்துள்ள புகார் மனுவில் "ஆதிதிராவிடர் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட தங்கள் தோளப்பள்ளி ஊராட்சியில் மாற்று சமூகத்தை சேர்ந்த கல்பனா சுரேஷ் என்பவர் முறைகேடாக போலியான ஆதிதிராவிடர் சாதி சான்றிதழை கொடுத்து வெற்றி பெற்றுள்ளார். ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுத்து பதவி நீக்கம் செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் தலைமையில் செயல்படும் விழிக்கண் குழு தொடர் விசாரணை நடத்தியதில் தோளப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கல்பனா சுரேஷ் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர் இல்லை என்றும் முறைகேடாக சாதி சான்றிதழை கொடுத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது தெரியவந்துள்ளது.

மாவட்ட விழிக்கண் குழு விசாரணையில் குறிப்பிட்டவை

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் தோளப்பள்ளி கிராமத்தைச் சார்ந்த பாக்கியராஜ் என்பவர் அணைக்கட்டு வட்டம் தோனப்பள்ளி கிராம ஊராட்சி 2021 உள்ளாட்சி தேர்தலில் கல்பனா சுரேஷ் என்பவர் போலியான SC (ஆதிதிராவிடர்) சாதி சான்றிதழ் சமர்ப்பித்து போட்டியிட்டது குறித்து புகார் மனு வரப்பெற்றதின் பேரில் வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட அளவிலான விழிக்கண் குழுவின் (District Level Vigilance committee) விசாரணை கோரி அறிக்கை வரப்பெற்றது.

அதில் கல்பனா கரேஷ் இந்து - கவரைநாயுடு சமூகத்தை சார்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்பனா சுரேஷ் என்பவரின் பூர்வீகம் வேலூர் மாவட்டம் , பேர்ணாம்பட்டு வட்டம் என்பதால் பேர்ணாம்பட்டு வட்டாட்சியரின் கடிதத்தில் பத்தலபல்லி கிராம நிர்வாக அலுவலர், சின்னதாமல் செருவு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பேர்ணாம்பட்டு வருவாய் ஆய்வாளர் ஆகியோர் கல்பனா சுரேஷ் உறவினரான பெரியதாமல் செருவு எனும் கிராமத்தில் வசிக்கும் சம்பூர்ணம் (கல்பனாவின் பெரியம்மா), மசிகம் கிராமத்தில் வசிக்கும் இந்திராணி (கல்பனாவின் உறவினர்) மற்றும் மேட்டுக்குடிகள் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் கல்பனா சுரேஷ் இந்து - கவரைநாயுடு சமூகத்தை சார்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, "தோளப்பள்ளி ஊராட்சியில் தற்போது தலைவராக உள்ள கல்பான சுரேஷ் முறைகேடாக ஆதிதிராவிடர் சாதி சான்றிதழ் கொடுத்து வெற்றி பெற்றது நிரூபனம் ஆகியுள்ளது. இது தொடர்பாக மாவட்ட விழிக்கண் குழு தலைவர் என்ற முறையில், கல்பனா மீது நடவடிக்கை எடுக்க கோரும் இது தொடர்பான கடிதத்தை மாவட்ட ஆட்சியர் மாநில தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப உள்ளார். இதில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்" எனக் கூறினர். அதோடு, முறைகேடாக சாதி சான்றிதழ் அளித்த அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் எரிவாயு குழாய்கள் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்துக... ஓபிஎஸ்...

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.