ETV Bharat / state

Maha Shivaratri: வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் இரவு முழுக்க தரிசனம்!

author img

By

Published : Feb 19, 2023, 2:56 PM IST

Maha
Maha

மகா சிவராத்திரியையொட்டி வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இரவு முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மகா சிவராத்திரி : வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் இரவு முழுக்க தரிசனம்

வேலூர்: மகா சிவராத்திரியையொட்டி நேற்று(பிப்.18) நள்ளிரவில் சிவாலயங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்தினர். அதன் ஒரு பகுதியாக வேலூர் கோட்டையில் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் நேற்று மாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். முதல் கால பூஜை மாலை நான்கு முப்பது மணிக்கு தொடங்கியது. சனிப் பிரதோஷம் மற்றும் சிவராத்திரி சேர்ந்து வந்ததாலும், அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வழிபாடு நடத்தினர்.

சிவலிங்கத்திற்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தன. பின்னர், பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி மற்றும் சிவ பக்தர்களின் பஜனைகள் நடைபெற்றன. சிவலிங்கத்திற்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் அலங்காரங்களை பொதுமக்கள் கண்டுகளிக்க ஏதுவாக கோவில் வளாகத்தில் ஆங்காங்கே டிஜிட்டல் திரைகள் வைக்கப்பட்டன.

இதையும் படிங்க: Maha Shivratri: அண்ணாமலையார் கோயில் லிங்கோத்பவர் சிறப்பு அபிஷேகம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.