ETV Bharat / state

கார் ஒர்க் ஷாப்பில் கொள்ளையர்கள் கைவரிசை - போலீஸ் வலைவீச்சு

author img

By

Published : Nov 5, 2019, 8:00 AM IST

Theft

வேலூர்: நாட்றம்பள்ளி அருகே நான்கு சக்கர வாகன பழுதுபார்க்கும் கடையின் பூட்டை உடைத்து மடிக்கணினி உட்பட 3 லட்சம் மதிப்பிலான பொருட்களை இன்னோவா காரில் வந்த நான்கு திருடர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த பையான பள்ளி கூட்டுரோடு பகுதியில் வசித்துவருபவர் யாசர். இவர் அதே பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நான்கு சக்கர வாகனம் பழுதுபார்க்கும் கடை நடத்திவருகிறார். இவர் நேற்று இரவு 9 மணி அளவில் வழக்கம்போல் பணியை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின்னர் காலை 10 மணியளவில் கடைக்குச் சென்று பார்த்தபோது கடைக்குப் போடப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது அடுத்தடுத்து இரண்டு கதவுகளின் பூட்டு உடைக்கப்பட்டு கடையில் வைக்கப்பட்டிருந்த மடிக்கணினி மற்றும் ரூ.3 லட்சம் மதிப்பிலான உதிரிபாகங்களை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

Theft
டிப்டாப் கொள்ளையர்கள்

இதனையடுத்து, கடையில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பார்த்தபோது இன்னோவா காரை கடையின் அருகில் நிறுத்திவிட்டு அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பொருட்களை திருடி சென்றது பதிவாகியிருந்தது.

இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, நாட்றம்பள்ளி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கார் ஒர்க் ஷாப்பில் கொள்ளை
நாட்றம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் நாள்தோறும் அதிகரித்து வருவதாகவும், காவல் துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுத்திருக்க முடியும் என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க...

வேலூர் முன்னாள் மேயர் குத்தாட்டம்!

Intro:நாட்றம்பள்ளி அருகே நான்கு சக்கர பழுதுபார்க்கும் கடையின் பூட்டை உடைத்து மடிப்பு கணினி உள்பட 3லட்சம் பதிப்புள்ள மடிப்பு கணினி மற்றும் உதிரிபாகங்கள் கொள்ளை இனோவா காரில் வந்த நான்கு திருடர்கள் கைவரிசை சிசிடிவி கேமராவில் பதிவு வைத்து காவல்துறையினர் விசாரணைBody:




வேலூர் மாவட்டம்

நாட்றம்பள்ளி அடுத்த பையான பள்ளி கூட்டுரோடு பகுதியில் வசித்து வருபவர் யாசர்..

இவர் அதே பகுதியில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நான்கு சக்கர வாகனம் பழுதுபார்க்கும் கடை வைத்து நடத்தி வருகிறார் இந்நிலையில் யாசர் நேற்று இரவு 9 மணி அளவில் வழக்கம்போல் பணியை முடித்துக்கொண்டு வீட்டுக்கு சென்றுள்ளார்...

பின்னர் காலை 10 மணி அளவில் கடைக்கு சென்று பார்த்த போது கடையின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ந்து போய் உள்ளே சென்று பார்த்தபோது அடுத்தடுத்து இரு கதவு பூட்டு உடைக்கப்பட்டு கடையில் வைக்கப்பட்டிருந்த மடிப்பு கணினி மற்றும் 3 லட்சம் மதிப்புள்ள உதிரிபாகங்கள் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர் சிசிடிவி கேமராவில் பார்த்த பொழுது இனோவா காரை கடையின் அருகில் நிறுத்திவிட்டு 4 திருடர்கள் கடையை பூட்டை உடைத்து உள்ளே சென்று பொருட்களை திருடி சென்றது பதிவாகியிருந்தது இதுகுறித்து நாட்றம்பள்ளி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு தப்பிச் சென்ற நான்கு திருடர்களை தேடி வருகின்றனர் நாட்றம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் திருட்டு அதிகரித்து வருகிறது பொதுமக்கள் கூறுகையில் போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் இருந்திருந்தால் இதுபோன்ற திருட்டைத் தடுக்க முடிந்திருக்கும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்....Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.