ETV Bharat / state

திருச்சியில் மனநலம் பாதித்தவர் தற்கொலை!

author img

By

Published : Jul 5, 2021, 8:55 PM IST

தூக்கிட்டு உயிரிழப்பு
தூக்கிட்டு உயிரிழப்பு

கருமலை அருகே மனைவியின் முகத்தை அரிவாளால் வெட்டிய மனநலம் பாதித்த கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி: மனைவியை அரிவாளால் வெட்டிவிட்டு கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருங்காபுரி ஒன்றியத்துக்குட்பட்ட மாங்கனாப்பட்டியைச் சேர்ந்தவர் ஆண்டியப்பன் (42). இவருக்கு இரு மனைவிகள்.

முதல் மனைவி சின்னப்பொண்ணுக்கு 8 வயதில் ஒரு மகளும், இரண்டாவது மனைவி அழகம்மாளுக்கு 12 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

ஆண்டியப்பன் கடந்த ஒரு வருடமாக மனநலம் பாதிப்புக்குச் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்றிரவு (ஜூலை.4) ஆண்டியப்பன் தனது மனைவி அழகம்மாளின் முகத்தில் அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது.

படுகாயங்களுடன் இருந்த அழகம்மாளை மீட்ட அக்கம்பக்கத்தினர், சிகிச்சைக்காக அவரை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

தற்கொலை தீர்வல்ல
தற்கொலை தீர்வல்ல

மனைவியை அரிவாளால் வெட்டிய ஆண்டியப்பன், சிறிது நேரத்திலேயே வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ஆண்டியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த புத்தாநத்தம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: மாமா மகன்களிடம் போன் பேசிய சிறுமிகளை கொடூரமாகத் தாக்கிய குடும்பத்தார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.