ETV Bharat / state

விவசாயிகள் மண்டை ஓடுகளுடன் பிச்சை எடுக்கும் போராட்டம்

author img

By

Published : Jan 6, 2020, 9:29 AM IST

விவசாயிகள்
விவசாயிகள்

திருச்சி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 4 ஆவது நாளாக விவசாயிகள் மண்டை ஓடுகளுடன் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு அதற்கான நடவடிக்கைகள் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

இதனால், விவசாயிகள் கடன் தள்ளுபடி, நகை ஏலம் ஜப்தியை நிறுத்த வேண்டும், வெங்காயத்தை அரசே நியாமான விலையில் கொள்முதல் செய்தல், 58ம் கால்வாயில் வருடம் முழுவதும் தண்ணீர் கிடைக்க வேண்டும், தமிழ்நாடு எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீரை வீணாக அரபிக்கடலில் கலக்காமல் தடுப்பது, ஊட்டியில் பெய்யும் மழைநீரை மாயாறு வழியாக கர்நாடகத்திற்கு செல்லாமல் பவானி அணைக்கு திருப்பி விட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டம், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தொடங்கியது. வரும் 8ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு

போராட்டத்தின் முதல் நாளில் விவசாயிகள் மேல்சட்டை அணியாமல் நாமம் போட்டு உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் விதவிதமான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று 4வது நாளாக மண்டை ஓடுகளுடன் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

மேலும், தமிழ்நாடு அரசு கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக விவசாயிகள் நிர்வாணமாக சென்னையை நோக்கி ஊர்வலமாகச் செல்ல முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

இதையும் படிங்க: வேலூரில் பொங்கல் பரிசு வரும் 9ஆம் தேதி வழங்கல்!

Intro:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 4வது நாளாக விவசாயிகள் மண்டை ஓடுகளுடன் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.Body:
திருச்சி:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 4வது நாளாக விவசாயிகள் மண்டை ஓடுகளுடன் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கை எடுக்கவில்லை அதனால் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். நகை ஏலம் ஜப்தி நடவடிக்கையை நிறுத்திட வேண்டும். வெங்காயத்தை விவசாயிகளிடம் அரசே நியாமான விலையில் கொள்முதல் செய்து குறைவான விலையில் மக்களுக்கு கொடுக்க வேண்டும். காவிரியில் வரும் வெள்ளநீரை 30 ஆண்டுகளுக்கு முன்பே மேட்டூர் - அய்யாறு - உப்பாறு இணைப்பு திட்டம், காவிரி - குண்டாறு - வைகை இணைப்பு திட்டம் அறிவித்ததை நிறைவேற்ற வேண்டும். கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இடுக்கி மாவட்டத்தை கேரளாவில் இருந்து பிரித்து தமிழகத்துடன் இணைத்து முல்லைபெரியார் பிரச்சனை, 58ம் கால்வாயில் வருடம் முழுவதும் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆலடியாறு டேமில் துளையிட்டு கீழ்கூடலூர், கம்பம், உத்தமபாளையம், போடி, தேனி, பெரியகுளம், மஞ்சள் ஆற்றை தாண்டி தேவன்கோட்டை வெள்ளோடு, திண்டுக்கல் எரியோடு கடவூர் வழியாக திருச்சி வையம்பட்டி பொன்னனையாறு டேமில் இணைக்க வேண்டும். தமிழக எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீரை வீணாக அரபிக்கடலில் கலக்காமல் தடுப்பதும், ஊட்டியில் பெய்யும் மழைநீரை மாயாறு வழியாக கர்நாடகத்திற்கு செல்லாமல் பவானி டேம்-க்கு திருப்பி விட வேண்டும்.
10 ஆண்டுகள் முன்பு குடும்ப கட்டுப்பாடு பிரச்சாரம் செய்த அரசு தற்பொழுது லாபகரமான விலையை விவசாயிகளுக்கு கொடுக்காமல், விவசாயிகளை விவசாயத்தை விரட்டிவிட்டு மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு 1 மடங்கு விளைச்சலுக்கு பதில் 5 மடங்கு உற்பத்தியாகும் மரபணு மாற்றப்பட்ட உணவை உற்பத்தி செய்து இளைஞர்களுக்கு கொடுத்து ஆண்மை இழக்கவும், பெண்கள் குழந்தை பெற முடியாமல் செய்யும் மரபணு மாற்றப்பட்ட விதை உணவை இறக்குமதி செய்வதை தடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தொடங்கியது.
திருச்சி ஜங்சன் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தில் விவசாயிகள் மேல்சட்டை அணியாமல் நாமம் போட்டு உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். போராட்டம் வரும் 8ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 3வது நாளான நேற்று விவசாயிகள் கோவணம் அணிந்து, பட்டை நாமம் போட்டு, ரத்தக் கண்ணீர் வடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து இன்று 4வது நாளாக மண்டை ஓடுகளுடன் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக விவசாயிகள் நிர்வாணமாக சென்னையை நோக்கி ஊர்வலமாகச் செல்ல விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.