ETV Bharat / state

'95% தமிழர்கள் மத்திய அரசின் பணி ஆணை பெற்றுள்ளனர்' - எல்.முருகன் பெருமிதம்!

author img

By

Published : Jul 22, 2023, 9:25 PM IST

7வது ரோஸ்கார் மேளா வேலை வாய்ப்பு பணி ஆணை வழங்கும் விழா
95% தமிழர்கள் மத்திய அரசின் பணி ஆணை பெற்றுள்ளனர்

100 ஆவது சுதந்திர தினத்தில் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக இருக்க வேண்டும் என 7ஆவது ரோஸ்கார் மேளா வேலை வாய்ப்பு பணி ஆணை வழங்கும் விழாவில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கூறியுள்ளார்.

95% தமிழர்கள் மத்திய அரசின் பணி ஆணை பெற்றுள்ளதாக எல்.முருகன்

திருச்சி : தமிழ்நாட்டில் 7ஆவது ரோஸ்கார் மேளா வேலை வாய்ப்புப் பணி ஆணை வழங்கும் விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் இன்று (ஜூலை 22) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக பேசினார். இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் 109 பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசுகையில், “பாரத பிரதமர் நரேந்திர மோடி மிக உயரிய நோக்கமும், முயற்சியும் இந்த நாட்டில் வேலை வாய்ப்பை அதிகப்படுத்த வேண்டும் என்பது தான். புதுப்புது தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து அதை மக்களுக்குக் கொண்டு வர வேண்டும் என்பது பிரதமரின் எண்ணமாக இருந்து கொண்டிருக்கிறது. கடந்த 9 ஆண்டுகளாக நமது நாட்டில் மிகப்பெரிய வளர்ச்சியான நாடாக முன்னேறி கொண்டிருக்கிறது. இந்தாண்டு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் முடிந்து 76 ஆம் ஆண்டு அடி எடுத்து வைக்கிறது.

நம்முடைய இலக்கு அடுத்த 25 ஆண்டுகளில் 100ஆவது சுதந்திர தினத்தில் நாடு வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும். இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் விதமாக ஸ்டார்ட் அப் இந்தியா என பல திட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். 2014 ஆம் ஆண்டுக்கு முன்பாக 500 கம்பெனிகள் தான் இருந்தது. இந்த 9 ஆண்டுகளில் மட்டும் ஒரு லட்சம் கம்பெனிகள் வளர்ந்துள்ளது. உலகத்தில் மிகப்பெரிய 3வது இடத்தில் இருக்கிறது இந்தியா. இதற்குக் காரணம் பாரத பிரதமர் மோடி தான்.

உலகத்திலேயே மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்ற பொருளாதார நாடாக இந்தியா இருக்கிறது. இங்கிலாந்தை பின் தள்ளிவிட்டு மிகவும் வேகமாக வளர்ந்த வருகின்ற 5ஆவது நாடாக நம்முடைய பாரத நாடு இருக்கிறது. இது கடந்த 9 ஆண்டுகளில் வளர்ந்துள்ளது. ஒரு ஆண்டுக்குள் 10 லட்சம் வேலை வாய்ப்பு உருவாக்கி கொடுக்கப்பட்டு வருகிறது. 6 மாதத்தில் 6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பிஜேபி ஆளுகின்ற மாநிலங்களில் மிக வேகமாக இந்த வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தி கொடுக்கப்பட்டிருக்கிறது.

அக்டோபர் 2022 ஆம் தேதி முதல் வேலை வாய்ப்பு முகமை பாரத பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அடுத்த 25 ஆண்டுகளில் இந்த தேசத்தை வழி நடத்துகின்ற நாடாக நாம் இருக்கின்றோம். கர்மயோகி பிரபா மூலமாக கிட்டத்தட்ட 400 புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பாரத பிரதமர் நல்ல சிறந்த ஆட்சியை கொடுத்துக் கொண்டிருக்கிறார் டிஜிட்டல் பேமெண்ட், தேவையற்ற சட்டங்கள் இருந்தது அந்த சட்டங்களை எல்லாம் நீக்கப்பட்டு இருக்கிறது. இந்த நாட்டின் வளர்ச்சிக்கு, வேகத்திற்கு தடையாக இருக்கக் கூடாது.

அந்த தடை கற்களை அகற்றிவிட்டு ஒரு நல்ல ஆட்சி பாரத பிரதமர் நரேந்திர மோடி கொடுத்துக் கொண்டிருக்கிறார். சேவை, நல்ல அரசாங்கத்தை கொடுக்க வேண்டும், ஏழை எளிய மக்களின் நலனுக்கான மேம்பாடு இந்த மூன்று தாரக மந்திரத்தை மோடி அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்.

விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக மிகக் குறைந்த வட்டி வழங்கப்படுகிறது. சிறு வியாபாரிகளுக்கு சுழல் நீதி என்று சொல்லக்கூடிய பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. 140 கோடி மக்கள் வாழும் இந்த நாட்டில் அரசாங்கத்தின் சேவையை, ஏழை எளிய மக்களின் நலன், நல்ல ஆட்சி மூலமாக மக்களை மேம்படுத்துவதற்கு முன்னேற்றத்திற்கு நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றது.

ஒரு சிறந்த அதிகாரிகளாக நாம் வரவேண்டும் என்பதற்காக தான் நம்முடைய கருமயோகி பல பயிற்சிகளும் பல திட்டங்களும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். உலகத்தின் வழிகாட்டியாக ஜி-20 மாநாடு நடத்திக் கொண்டிருக்கிறோம். நாம் அடுத்த 25 ஆண்டுகளுக்கான பட்ஜெட்டை முடித்துக் கொண்டு உள்ளோம்.

நாட்டின் முன்னேற்றம் வளர்ச்சி அடிப்படை கட்டமைப்பு மிக முக்கியமானது. நம்முடைய இலக்கு அடுத்த 25 ஆண்டுகளில் 100வது சுதந்திர தினத்தில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும் இணைந்து உழைப்போம் என கேட்டுக்கொண்டார்” எனக் கூறினார்

பின்னர் இணை அமைச்சர் எம் முருகன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், “10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பில் இதுவரை 6 லட்சம் பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இன்றுடன் சேர்த்து ஆறரை லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புக்கான பணியாணை வழங்கப்பட்டுள்ளது. பாரத பிரதமர் நரேந்திர மோடி ஒரு வருடத்திற்குள் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்படும் என்ற தேசத்திற்கு சொல்லியிருந்தார்.

அதன் படி 6 லட்சம் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு முகாம் மூலம் இந்தியா முழுவதும் மத்திய அரசாங்கத்தின் பணிகள் ஆணைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு மாதமும் ரோஸ்கார் மேல முகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வரும் காலத்தில் 10 லட்சம் பேருக்கு கொடுக்கப்படும் சொன்னதை சொன்ன படி செய்பவர் நரேந்திர மோடி. மத்திய அரசாங்கத்தின் உடைய பணி ஆணை வாங்கியவர்கள் 95 விழுக்காடு பேர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் பணி ஆணை வாங்கி இருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாரத மாதாவுக்கு உயிர் இருந்திருந்தால்.. மணிப்பூர் விவகாரத்தை காட்டமாக விமர்சித்த சீமான்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.