ETV Bharat / state

கூட்டுறவு வங்கி கிளையில் திருட முயன்ற இளைஞர் கைது!

author img

By

Published : Dec 30, 2020, 3:59 PM IST

கூட்டுறவு வங்கி கிளையில் திருட முயன்ற இளைஞர் கைது
கூட்டுறவு வங்கி கிளையில் திருட முயன்ற இளைஞர் கைது

திருப்பூர்: கிருஷ்ணாபுரம் அருகேவுள்ள மாவட்ட கூட்டுறவு வங்கி கிளையில், திருட்டு முயற்சியில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகேவுள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு வங்கி கிளை அமைந்துள்ளது.

கூட்டுறவு வங்கியில் திருட்டு முயற்ச்சி:

இங்கு, டிச.27ஆம் தேதி இரவு 10.30 மணியளவில், வங்கியின் முன்பக்க கதவுகளை உடைத்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, சத்தம் கேட்டு வந்த காவலாளியை கண்டதும், திருடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

இது குறித்து மாவட்ட பொது மேலாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மடத்துக்குளம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்டமாக அங்கிருந்த கண்காணிப்பு மேராவில் பதிவான காட்சிகள், கைரேகைகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

சிசிடிவி காட்சி

குற்றவாளி கைது:

இரண்டு நாள்கள் தேடுதல் வேட்டைக்கு பின்னர், இன்று (டிச.30) வங்கியில் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட கொமரலிங்கம் அருகே சாளரப்பட்டியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (28) என்ற இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து கைது செய்த இளைஞரிடம் காவல் துறையினர், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: விடுதியில் தனியாக தங்கியிருப்பவர்களை குறிவைத்து மடிக்கணினி, செல்போன் திருடியவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.