மைனர் பெண்ணை திருமணம் செய்த இளைஞர் - தீக்குளித்து தற்கொலை முயற்சி

author img

By

Published : Sep 17, 2022, 5:59 PM IST

Etv Bharat தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்

வாணியம்பாடியில் மைனர் பெண்ணை கடந்தி திருமணம் செய்த இளைஞர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இளைஞர் அச்சத்தில் தீக்குளித்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர்: வாணியம்பாடி அண்ணா நகர் சி.எல் காலனியைச் சேர்ந்தவர் போடி என்கிற திருநாவுக்கரசு (21). கூலி தொழிலாளியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த மைனர் பெண்ணை நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த 13ஆம் தேதி அப்பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

வீட்டை விட்டு வெளியில் சென்ற அப்பெண் வெகுநேரமாகியும் வீட்டிற்கு வராததால் பெண்ணின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், காணாமல் போன இளம்பெண்ணை தேடி வந்தனர்.

இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் கடத்தி திருமணம் செய்து கொண்டதாக தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து திருநாவுக்கரசு மீது போக்சோ வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரது தாய் மற்றும் தந்தையை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்

இதனால், அச்சமடைந்த திருநாவுக்கரசு, தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில், படுகாயமடைந்த திருநாவுக்கரசு, ஆபத்தான நிலையில் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

தொடர்ந்து, தற்கொலை முயற்ச்சி குறித்து திருநாவுக்கரசு மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்ற்னர்.

இதையும் படிங்க: பண்ருட்டியில் சிறுமியை கர்ப்பமாக்கிய மெக்கானிக் போக்சோவில் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.