ETV Bharat / state

ஆம்பூர் பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்த முதியவருக்கு நேர்ந்த சோகம்

author img

By

Published : Oct 29, 2022, 7:03 AM IST

ஆம்பூர் பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்த முதியவர் மரணம்!....
ஆம்பூர் பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்த முதியவர் மரணம்!....

ஆம்பூர் பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அண்ணா பேருந்து நிலையத்தில் நேற்று (அக். 28) முதியவர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்கள் ஆம்பூர் நகர காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் முதியவரின் உடலை மீட்ட பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன்பின் அவர் யார் என்பது குறித்து விசாரணையை தொடங்கினர். அப்போது, உயிரிழந்தது ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊராட்சி, வன்னியநாதபுரம் பகுதியை சேர்ந்த மாணிக்கம் (50) என்பதும் உடல்நலக்குறைவால் இருந்த அவர் இன்று ஆம்பூர் அண்ணா பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிந்திருப்பதும் தெரியவந்தது. இச்சம்பவம் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் சில மணி நேரம் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இதையும் படிங்க: திண்டுக்கல் அருகே பகீர் சம்பவம் - பழைய இரும்பு வியாபாரி வெட்டிப்படுகொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.