ETV Bharat / state

மனைவியைக் கொலைசெய்த கணவர் கைது

author img

By

Published : Feb 12, 2022, 6:58 PM IST

மனைவியை கொலை செய்த கணவர் கைது
மனைவியை கொலை செய்த கணவர் கைது

திருப்பத்தூரில் திருமணமான மூன்று ஆண்டுகளில் மனைவியைக் கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்துகொண்டதாக நடமாடிய கணவரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த சாமியார் மடம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாமணி. இவருக்கும் ஓசூர் பகுதியைச் சேர்ந்த நந்தினி என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு கௌசிக் என்ற மூன்று வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், திருமணமான ஒரு வருடத்திற்குப் பிறகு நந்தினிக்கும் ராஜாமணி குடும்பத்தினருக்கும் தொடர்ந்து அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது.

இன்று காலை நந்தினியின் பெற்றோருக்கு அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் நந்தினி தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு வந்த நந்தினியின் பெற்றோர், உறவினர்கள் உடற்கூராய்விற்காக இருந்த நந்தினியின் உடலைக் கண்ட அவர்கள் தலையில் பலத்த காயம் இருப்பதாகவும், தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

உடனடியாக தனது மருமகன், அவரது பெற்றோர்களிடம் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என நந்தினியின் உறவினர்கள் ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து இறப்பு குறித்து வாணியம்பாடி கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியம் விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில், இது கொலையெனவும் உடனடியாக ராஜாமணியைக் கைதுசெய்ய வேண்டும் எனக் காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். உடனடியாக ராஜாமணியைக் கைதுசெய்த காவல் துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: சூட்கேஸில் பெண் சடலம் - ஒருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.