ETV Bharat / state

சூட்கேஸில் பெண் சடலம் - ஒருவர் கைது

author img

By

Published : Feb 12, 2022, 4:51 PM IST

திருப்பூர் மாவட்டம் புதுநகர் பகுதியில் சூட்கேஸில் பெண் சடலம் இருந்த வழக்கில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரை காவல் துறையினர் ஓசூரில் கைது செய்தனர்.

சூட்கேஸில் பெண் சடலம்
சூட்கேஸில் பெண் சடலம்

திருப்பூர் தாராபுரம் புதுநகர் பகுதியிலுள்ள கால்வாயில் கடந்த 7ஆம் தேதி கேட்பாரற்று சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. அதிலிருந்து துர்நாற்றம் வீசியதால் இது குறித்து அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். காவல் துறையினா் சூட்கேஸை சோதனை செய்ததில் பெண் சடலம் இருந்தது தெரியவந்தது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஐந்து தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரனை செய்ததில் இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் பெண் சடலத்துடன் கூடிய சூட்கேஸை கொண்டு வந்தது தெரியவந்தது.

இந்நிலையில் அந்த பெண் குடியிருந்த வீட்டை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். உயிரிழந்த பெண் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், அவரின் பெயர் நேகா என்பதும் தெரியவந்தது. அப்பெண் அபிஜித் என்ற நபரோடு கடந்த ஒரு மாதமாக திருப்பூர் வந்து வெள்ளியங்காடு கே.எம்.ஜி பகுதியில் வீடு எடுத்து குடியிருந்தது தெரியவந்துள்ளது.

சம்பவம் நடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்ணுடன் தங்கி இருந்த அபிஜித் வீட்டின் உரிமையாளரிடம் தான் வீட்டை காலி செய்வதாக கூறி பொருள்களை எடுத்துச் சென்றுள்ளார். அப்போதுதான் யாருக்கும் சந்தேகம் வராதபடி கொலையான பெண்ணை சூட்கேஸில் வைத்து கொண்டு சென்று புதுநகர் பகுதியில் கால்வாயில் வீசியிருக்கலாம் என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

அபிஜித், ஜெய்லால் ஆகியோரின் செல்ஃபோன்களை ஆய்வு செய்ததில் அவர்கள் தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல் ஆய்வாளர் சரவணரவி தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் ஓசூர் அருகே பாத்தகோட்டா கிராமத்தில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

அங்கு பதுங்கியிருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த லால் சவ்ரா (27) என்பவரை கைது செய்து திருப்பூருக்கு அழைத்து வந்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் கைது

திருப்பூர் தாராபுரம் புதுநகர் பகுதியிலுள்ள கால்வாயில் கடந்த 7ஆம் தேதி கேட்பாரற்று சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. அதிலிருந்து துர்நாற்றம் வீசியதால் இது குறித்து அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். காவல் துறையினா் சூட்கேஸை சோதனை செய்ததில் பெண் சடலம் இருந்தது தெரியவந்தது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஐந்து தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரனை செய்ததில் இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் பெண் சடலத்துடன் கூடிய சூட்கேஸை கொண்டு வந்தது தெரியவந்தது.

இந்நிலையில் அந்த பெண் குடியிருந்த வீட்டை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். உயிரிழந்த பெண் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், அவரின் பெயர் நேகா என்பதும் தெரியவந்தது. அப்பெண் அபிஜித் என்ற நபரோடு கடந்த ஒரு மாதமாக திருப்பூர் வந்து வெள்ளியங்காடு கே.எம்.ஜி பகுதியில் வீடு எடுத்து குடியிருந்தது தெரியவந்துள்ளது.

சம்பவம் நடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்ணுடன் தங்கி இருந்த அபிஜித் வீட்டின் உரிமையாளரிடம் தான் வீட்டை காலி செய்வதாக கூறி பொருள்களை எடுத்துச் சென்றுள்ளார். அப்போதுதான் யாருக்கும் சந்தேகம் வராதபடி கொலையான பெண்ணை சூட்கேஸில் வைத்து கொண்டு சென்று புதுநகர் பகுதியில் கால்வாயில் வீசியிருக்கலாம் என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

அபிஜித், ஜெய்லால் ஆகியோரின் செல்ஃபோன்களை ஆய்வு செய்ததில் அவர்கள் தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல் ஆய்வாளர் சரவணரவி தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் ஓசூர் அருகே பாத்தகோட்டா கிராமத்தில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

அங்கு பதுங்கியிருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த லால் சவ்ரா (27) என்பவரை கைது செய்து திருப்பூருக்கு அழைத்து வந்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.