ETV Bharat / state

குஜராத்திற்கு கொடுத்தது போல தமிழ்நாட்டிற்கும் நிதி தர வேண்டும் - சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தல்..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 26, 2023, 3:15 PM IST

சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு

TN Assembly Speaker Appavu Byte: வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தபின் தேவையான நிதியை மத்திய அரசிடம் இருந்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாங்கி தருவார் என நம்புகிறோம். போதுமான நிதியைப் பெற்றுத்தந்தால் மகிழ்ச்சியடைவோம் எனத் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி: அரபிக்கடலில் உருவான வளிமண்டல சுழற்சி காரணமாக டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. இந்த அதி கனமழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளுக்குள்ளும், சாலைகளிலும் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி நின்றது.

இதனால், மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானதைத் தொடர்ந்து பல்வேறு மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, சீரமைக்கப்பட்டன. இந்த நிலையில், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று (டிச.26) நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. இதில், தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம், செல்போன் டவர்கள் சீரமைக்கப்பட்டு மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் இதெல்லாம் வழங்கப்பட்டுள்ளதா? ஸ்ரீ வைகுண்டத்தில் ரயில் தண்டவாளங்கள் 8 கி.மீ தூரம் தான் சேதமடைந்துள்ளது. அதை மத்திய அரசு ஏன் இன்னும் சீரமைக்கவில்லை.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு உணவு கிடங்கிலிருந்த உணவுப் பொருட்களை ஏன்? பாதுகாக்கவில்லை என ஆளுநர் தமிழிசைக்கு கேள்வி எழுப்பினார். மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (டிச.26) வருகை தந்துள்ளார். அவரின் வருகையை வரவேற்கிறோம். வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பின் தேவையான நிதியை மத்திய அரசிடம் இருந்து வாங்கி தருவார் என நம்புகிறோம்.

போதுமான நிதியைப் பெற்றுத்தந்தால் மகிழ்ச்சியடைவோம். தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தைத் தான் கேட்கிறோம். குஜராத்திற்குக் கொடுத்தது போலத் தமிழ்நாட்டிற்கும் நிதி தர வேண்டும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் 19வது ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.