ETV Bharat / state

'அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள்' - ஒருநாள் மழையில் சாய்ந்த சோகம்!

author img

By

Published : Jan 20, 2020, 6:27 PM IST

Thiruvarur heavy rain
Thiruvarur heavy rain

திருவாரூர்: சம்பா அறுவடைக்குத் தயாராகிருந்த நெற்கதிர்கள் அனைத்தும், திடீர் மழையினால் முற்றிலுமாகச் சாய்ந்து விவசாயிகளுக்கு அறுவடையை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

திருவாரூரில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, சம்பா பயிரிடும் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இவர்கள் பணிகள் தொடங்கிய நாள்முதலே உரத் தட்டுப்பாடு, ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல், இலை சுருட்டுப் புழு தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை அனுபவித்தனர். இந்தப் பிரச்னைகளையெல்லாம் கடந்துதான் சம்பா பணிகளை மேற்கொண்டு அறுவடைக்கு தயாராகினர்.

இந்நிலையில், நேற்று திருவாரூர் மாவட்டம் முழுவதும் காலை முதல் தொடர்ந்து பெய்த மழையினால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்கதிர்கள் அனைத்தும் முற்றிலுமாகச் சாய்ந்தன. நெற்கதிர்களைச் சூழ்ந்து மழை தண்ணீர் காணப்படுவதால், அறுவடைப் பணியை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

திருவாரூரில் சம்பா அறுவடைக்குத் தயாராகிருந்த நெற்கதிர்கள்

மேலும், சாய்ந்துள்ள நெற்பயிர்களை அரசு ஆய்வுசெய்து உரிய நிவாரணம் வழங்க முன்வர வேண்டும் என்றும், அறுவடை மேற்கொள்ள அரசு வழிவகைகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கைவைத்துள்ளனர்.

இதையும் படிங்க: குளு குளு கொடைக்கானலில் கொடிகட்டிப் பறந்த பாலியல் தொழில்: 6 இளம்பெண்கள் மீட்பு

Intro:


Body:திருவாரூர் மாவட்டத்தில் சம்பா அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் நேற்று பெய்த ஒரு நாள் மழையில் சாய்ந்ததால் அறுவடையை தொடங்க முடியாமல் விவசாயிகள் வேதனை.

திருவாரூரில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் சம்பா பயிரிடும் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. பணிகள் தொடங்கிய நாள்முதல் உரத்தட்டுப்பாடு, ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல் மற்றும் இலை சுருட்டுப் புழு தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை கடந்து சம்பா பணிகளை மேற்கொண்டு அறுவடைக்கு தயாராகி வந்தனர்.

இந்நிலையில் நேற்று திருவாரூர் மாவட்டம் முழுவதும் காலை முதல் தொடர்ந்து பெய்த மழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் சாய்ந்தது. மேலும் நெல் கதிர்கள் மழை தண்ணீரில் சூழ்ந்து காணப்படுவதால் அறுவடை பணியை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். நேரடி கொள்முதல் நிலையங்களை உரிய நேரத்தில் அரசு திறக்காததால் அறுவடை பணிகள் தாமதமாக செய்யும் நிலை ஏற்பட்டது எனவும் விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே அரசு சாய்ந்துள்ள நெற்பயிர்களை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க முன்வர வேண்டும், மேலும் அறுவடை மேற்கொள்ள அரசு வழிவகைகளை ஏற்படுத்தி தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.