திருவாரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கானத் தேர்தல் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கோட்டூர், முத்துப்பேட்டை ஆகிய ஐந்து ஒன்றியங்களுக்கு முதல்கட்டமாக வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.
மீதமுள்ள நன்னிலம், கொடவாசல், கொரடாச்சேரி, வலைங்கமான், நீடாமங்கலம் ஆகிய ஐந்து ஒன்றியங்களுக்கு வரும் 30ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.
அதற்காக, கொரடாச்சேரி பகுதியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, பேசிய அவர்,
”இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் நல்ல ஆட்சி நடைபெறுவதாக மத்திய அரசின் ஆய்வு அறிக்கை சொல்கிறது. தமிழ்நாட்டிற்கு வருகைதந்த சீன அதிபரும் சொல்லிருக்கிறார். எனவே மக்கள் அதிமுக-விற்கு உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: வாக்குப் பெட்டியை திருடிச்சென்று முட்புதரில் போட்டுவிட்டு உறங்கிய நபர் கைது!