ETV Bharat / state

விஷம் கலந்த உணவு - ஆடுகள் உயிரிழப்பு : காவல்துறை விசாரணை

author img

By

Published : Jun 12, 2021, 6:33 PM IST

விஷம் கலந்த உணவை தின்ற ஆடுகள் உயிரிழப்பு
விஷம் கலந்த உணவை தின்ற ஆடுகள் உயிரிழப்பு

திருவாரூர்: வலங்கைமான் அருகே விஷம் கலந்த உணவை தின்ற ஆடுகள் உயிரிழந்தன. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஆலங்குடி காமராஜர் காலனியில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். கூலி தொழிலாளர்களான இவர்கள் கூடுதல் வருமானத்திற்கு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.

இப்பகுதியில் விவசாய நிலங்கள் அதிகளவில் உள்ளதால் நேற்று (ஜுன்.11) ஆடுகள் மேய்ச்சலுக்காக சென்றுள்ளன. பின்னர் மாலையில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் இறந்து கிடந்ததை கண்டு உரிமையாளர்களிடம் அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக வலங்கைமான் காவல்துறையினருக்கு உரிமையாளர்கள் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் ஆடுகள் இறந்தது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:'ஆக்கிரமிப்பு குளங்களை மீட்டு தூர்வாருங்கள்' - விவசாயிகள் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.