ETV Bharat / state

இளைஞரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய கும்பல் - தேடுதல் வேட்டையில் போலீஸ்!

author img

By

Published : Jan 9, 2020, 11:35 PM IST

இளைஞரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய கும்பல்
இளைஞரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய கும்பல்

திருவண்ணாமலை: செங்கம் அருகே பட்டப்பகலில் இளைஞரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்ய முயன்ற அடையாளம் தெரியாத நபர்களைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி. இவர் அதே பகுதியில் உள்ள செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் தனக்குச் சொந்தமான இருசக்கர வாகனத்தில் தனது காதலியை ஏற்றிக் கொண்டு, திருவள்ளுவர் நகர் அருகே உள்ள முள்ளுகுட்டி ஏரிக்கரைக்குச் சென்றுள்ளார்.

அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த நான்கு அடையாளம் தெரியாத நபர்கள், இவர்களை வழிமறித்து தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்துள்ளனர். அப்போது கார்த்தி 'தங்களை விட்டுவிடுங்கள். தாங்கள் இங்கிருந்து சென்றுவிடுகிறோம்' எனக் கேட்டுள்ளார்.

ஆனால், மது போதையிலிருந்த கும்பல் கார்த்தியை கீழே தள்ளிவிட்டு அவரது காதலியிடம் தகாத செயலில் ஈடுபட முயற்சித்துள்ளனர். இதனைக் கண்ட கார்த்தி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது அவர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் சண்டையாக மாறியது.

பின்னர், காதலியை அங்கிருந்து தப்பிக்க வைத்தார். இதனையடுத்து அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கார்த்தியின் கை, கழுத்து, முதுகுப் பகுதியில் வெட்டியுள்ளனர். அதில், கார்த்தி கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு கீழே சரிந்து விழுந்துள்ளார்.

இச்சம்பவம் அக்கம் பக்கத்தினருக்கு தெரிந்துவிட்டதால் மாட்டிக் கொள்வோம் என அஞ்சிய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். பலத்த காயமடைந்த கார்த்திக்கின் சத்தம் கேட்டு வந்த விவசாயிகள், அவரை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறி, அவரை உடனடியாக மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கார்த்தி

இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று தடயங்கள் ஏதேனும் சிக்குகின்றதா என சோதனை செய்தனர். இதையடுத்து, இளைஞரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற கும்பலை காவல் துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக்கொலை - குமரியில் பரபரப்பு..!

Intro:செங்கம் அருகே பட்டப்பகலில் வாலிபரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்ய முயன்ற மர்ம நபர்களை செங்கம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்
Body:செங்கம் அருகே பட்டப்பகலில் வாலிபரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்ய முயன்ற மர்ம நபர்களை செங்கம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நேரு நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்தி. இவர் அதே பகுதியில் உள்ள செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான இரண்டு சக்கர வாகனத்தில் செங்கத்தை நோக்கி வந்து கொண்டிருந்த போது பேருந்து நிலையம் அருகே இவருக்கு வழக்கமான ரகசிய தோழியை தனக்கு சொந்தமான இரண்டு சக்கர வாகனத்தில் அழைத்து கொண்டு திருவள்ளுவர் நகர் அருகே உள்ள முள்ளுகுட்டி ஏரிக்கரை மேலே உள்ள முட்புதர் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது அங்கே மது அருந்திக் கொண்டிருந்த 4 மர்ம நபர்கள் இருவரையும் வழிமறித்து தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்தால் அவர்களுடன் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கார்த்தி எங்களை விட்டுவிடுங்கள் நாங்கள் இங்கிருந்து கிளம்பி விடுகிறோம் என கேட்டுள்ளார். அப்போது மது போதையில் இருந்த மர்ம நபர்கள் கார்த்தியை கீழே பிடித்துத் தள்ளிவிட்டு அவரது ரகசிய தோழியிடம் தகாத முறையில் ஈடுபட முயற்சித்துள்ளனர். இதனைக் கண்ட கார்த்தி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது அவர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் சண்டையாக மாறி 4 மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக கார்த்தியை வெட்டியுள்ளனர். கார்த்தி கழுத்தில் பலத்த வெட்டு பட்டு கீழே விழுந்துள்ளார். அப்போது அந்த மர்ம நபர்கள் கார்த்தியின் கை மற்றும் முதுகுப் பகுதியில் கத்தியால் சரமாரியாக குத்தி உள்ளனர். இதனை கண்ட அவருடைய ரகசிய தோழி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்பு நடந்த சம்பவம் அக்கம் பக்கத்தினருக்கு தெரிந்து விட்டதால் மாட்டிக் கொள்வோம் என அஞ்சி அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து அவர்கள் கொண்டு வந்த இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் கார்த்திக் கொண்டு வந்த இரண்டு சக்கர வாகனம் செல்போன் ஆகியவை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பலத்த காயமடைந்த கார்த்தி சத்தம் போட்டு கத்திய பிறகு அருகே இருந்த விவசாயி ஒருவர் அவரை அழைத்து வந்து செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறி அவரை உடனடியாக மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நேரத்தில் செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள
முள்ளுகுட்டி ஏரிக்கரையில் வாலிபர் ஒருவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Conclusion:செங்கம் அருகே பட்டப்பகலில் வாலிபரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்ய முயன்ற மர்ம நபர்களை செங்கம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.