ETV Bharat / state

'தி.மலையில் கிரிவலம் செல்ல பக்தர்கள் வர வேண்டாம்'

author img

By

Published : Mar 25, 2021, 5:04 AM IST

'தி.மலையில் கிரிவலம் செல்ல பக்தர்கள் வர வேண்டாம்'
'தி.மலையில் கிரிவலம் செல்ல பக்தர்கள் வர வேண்டாம்'

திருவண்ணாமலை: கரோனா தொற்று பரவல் காரணமாக பௌர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்கள் வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

திருவண்ணாமலையில் உள்ள, அண்ணாமலையார் மலையை சிவனாக வணங்கி, பக்தர்கள் வழிபடுகின்றனர். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளில் வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள், கிரிவலம் சென்று சுவாமி தரிசனம் செய்துவருகின்றனர்.


கரோனா ஊரடங்கால், 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல், பௌர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுவருகிறது. வரும் பௌர்ணமி நாளையொட்டி மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் பௌர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்கள் வர வேண்டாம் என அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.