ETV Bharat / state

ஒரே நாளில் போடப்பட்ட தார் சாலை - மலைவாழ் மக்கள் குற்றச்சாட்டு

author img

By

Published : Aug 17, 2022, 9:32 AM IST

திருவண்ணாமலை அருகே மலைவாழ் கிராமங்களுக்கு அமைக்கப்பட்ட 35 லட்ச ரூபாய் மதிப்பிலான தார் சாலை தரமற்ற முறையில் உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

திருவண்ணாமலை: செங்கம் அடுத்த கவுண்டனூர் ஊராட்சி குட்டூர் கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் அடிப்படை வசதிகளான மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடங்களுக்கு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்லும் சூழல் உள்ளது. இதனால், தங்களுக்கு தார் சாலை அமைத்து தர வேண்டுமென பல ஆண்டுகளாக அப்பகுதி மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி 35 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியினை அரசு ஒப்பந்ததாரர் துவங்கி வைத்துள்ளார். கூட்ரோடு பகுதியில் இருந்து குட்டூர் கிராமம் வரையில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் 35 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கப்பட்டது.

ஒரே நாளில் முடிக்கப்பட்ட தார் சாலை தரமற்ற வகையில் உள்ளதாகவும், இதுதொடர்பாக புகார் அளித்தும் வட்டாரா வளர்ச்சி அலுவலர்கள், நெடுஞ்சாலைத் துறையினர் யாரும் நேரில் வந்து ஆய்வு மேற்கொள்ளவில்லை என தெரிவித்தனர்.

திருவண்ணாமலை அருகே மலைவாழ் கிராம மக்களுக்கு அமைக்கப்பட்ட 35 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலான தார் சாலை தரமற்ற முறையில் இருப்பதாக கிராம மக்கள் வேதனை

இருபது ஆண்டுகள் கழித்து தங்கள் பகுதிக்கு தார் சாலை அமைக்கப்படுவது மகிழ்ச்சியாக இருந்தும், தரமற்ற தார்சாலை அமைத்தது மிகவும் வருத்தம் தருவதாகவும், தற்போது வரக்கூடிய பருவ மழைக்கே தார் சாலை தாங்காது எனவும் வேதனை தெரிவித்தனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தரமான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.