ETV Bharat / state

வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு

author img

By

Published : Jan 17, 2020, 1:10 PM IST

accident
accident

திருவண்ணாமலை: இருசக்கர வாகனத்தில் பால் எடுத்துச் சென்றவர் மீது வாகனம் ஒன்ற்ய் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த மேல்ராவந்தவாடி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (48). இவர், நேற்றிரவு 7 மணியளவில் தனது வீட்டிலிருந்து பால் ஸ்டோருக்கு இருசக்கர வாகனத்தில் பால் எடுத்துச்சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தில் சேதமடைந்த இருசக்கர வாகனம்
விபத்தில் சேதமடைந்த இருசக்கர வாகனம்

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய வாகனத்தை ஓட்டி வந்தது யார் என்று காவல் துறையினர் தீவிர விசாரணை செய்துவருகின்றனர்.

Intro:இருசக்கர வாகனத்தில் பால் எடுத்துச் சென்ற முருகன் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே பலிBody:இருசக்கர வாகனத்தில் பால் எடுத்துச் சென்ற முருகன் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே பலி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்ராவந்தவாடி பகுதியை சேர்ந்தவர் முருகன்(48).

இரவு சுமார் 7 மணியளவில் தனது வீட்டிலிருந்து பால் ஸ்டோருக்கு இருசக்கர வாகனத்தில் பால் எடுத்துச் சென்றார்.

அப்போது அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியதில், முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

பிரேத பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் அனுப்பி வைக்கப்பட்டது.

மேல்செங்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

இருசக்கர வாகனத்தின் பால் எடுத்துச் சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் விவசாயி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

Conclusion:இருசக்கர வாகனத்தில் பால் எடுத்துச் சென்ற முருகன் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே பலி
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.