திருவண்ணாமலை நகராட்சியில் வீடுகளுக்கு வரி விதிக்கும் அலுவலராக இருப்பவர் விக்ரமன். இவர் திருவண்ணாமலை நகரத்தை சேர்ந்த பட்டாபிராமன் என்பவர் தனது அப்பா பெயரில் உள்ள வீட்டின் வரியை தன் பெயருக்கு மாற்றி கொடுக்குமாறு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தார்.
அப்போது பட்டாபிராமனிடம் சொத்து வரியை மாற்றி கொடுப்பதற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். அதற்கு பட்டாபிராமனும் தருவதாக ஒப்புக்கொண்டார்.
இது குறித்து பட்டாபிராமன் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் பட்டாபிராமனிடம் ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரத்து 500 கொடுத்தனர்.
இந்தப் பணத்தை விக்ரமன் வாங்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் அவரை கைது செய்தனர். மேற்கொண்டு நகராட்சி வரி வசூலிக்கும் அலுவலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகராட்சி வரி வசூலிக்கும் அலுவலர் லஞ்சம் ஒழிப்பு துறையினரால் கைது செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதுபோல் லஞ்சம் வாங்கும் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அப்போதுதான் சாமானியர்கள் நிம்மதியாக தங்களுக்கு தேவையான அரசு சேவைகளை பெற முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்ட நகராட்சி வரி விதிக்கும் அலுவலர்!
திருவண்ணாமலை நகராட்சியில் வீடுகளுக்கு வரி விதிக்கும் அலுவலராக இருப்பவர் விக்ரமன். இவர் திருவண்ணாமலை நகரத்தை சேர்ந்த பட்டாபிராமன் என்பவர் தனது அப்பா பெயரில் உள்ள வீட்டின் வரியை தன் பெயருக்கு மாற்றி கொடுக்குமாறு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தார்.
அப்போது பட்டாபிராமனிடம் சொத்து வரியை மாற்றி கொடுப்பதற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். அதற்கு பட்டாபிராமனும் தருவதாக ஒப்புக்கொண்டார்.
இது குறித்து பட்டாபிராமன் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் பட்டாபிராமனிடம் ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரத்து 500 கொடுத்தனர்.
இந்தப் பணத்தை விக்ரமன் வாங்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் அவரை கைது செய்தனர். மேற்கொண்டு நகராட்சி வரி வசூலிக்கும் அலுவலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகராட்சி வரி வசூலிக்கும் அலுவலர் லஞ்சம் ஒழிப்பு துறையினரால் கைது செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதுபோல் லஞ்சம் வாங்கும் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அப்போதுதான் சாமானியர்கள் நிம்மதியாக தங்களுக்கு தேவையான அரசு சேவைகளை பெற முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.