ETV Bharat / state

மருத்துவரை ஒருமையில் பேசிய ஆட்சியர்.. திருவண்ணாமலை அரசு மருத்துவர்கள் திடீர் போராட்டம்!

author img

By

Published : Jun 2, 2023, 7:55 PM IST

Etv Bharat
Etv Bharat

தலைமை அரசு மருத்துவரை ஒருமையில் பேசிய மாவட்ட ஆட்சியரை கண்டித்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்

தலைமை மருத்துவரை ஒருமையில் பேசிய மாவட்ட ஆட்சியரை கண்டித்து அரசு மருத்துவர்கள் போராட்டம்!!

திருவண்ணாமலை: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை பிரிவில் தலைமை மருத்துவராகக் கமலக்கண்ணன் பணியாற்றி வருகிறார். காவல்துறை சார்பில் சந்தேகத்துக்குரிய மரணம் ஏற்படும் போது சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி இரவு நேரங்களில் பிராதே பரிசோதனை செய்ய வற்புறுத்துவதாகவும், மருத்துவர்களை மிரட்டுவதாகவும் கூறி இது தொடர்பாகப் பிரேதப் பரிசோதனை பிரிவின் தலைமை மருத்துவர் கமலக்கண்ணன் நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேரில் சந்திக்கச் சென்றுள்ளார்.

அப்போது மாவட்ட ஆட்சியர் முருகேஷ், டாக்டர் கமலக்கண்ணனை தரக்குறைவாகப் பேசி மிரட்டல் விடுத்தது மட்டுமின்றி உன்னை வேறு மாவட்டத்திற்கு இடமாறுதல் செய்து விடுவேன் என ஒருமையில் பேசி மிரட்டி உள்ளார். இந்நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் அரசு மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் உள்ளிட்டவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று பிற்பகல் மருத்துவர்களிடம் விரோத போக்கைக் கடைப் பிடிக்கும் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவு முன்பு கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: 'அவுட்சோர்சிங் முறையை கைவிடுக' - தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்கம் அரசுக்கு வேண்டுகோள்

மேலும் மருத்துவர்கள் கூறுகையில், ”திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பல சுமைகளுக்கிடையே பணி செய்யும் மருத்துவர்களின் குறைகளைக் கூட கேட்காமல் ஒருமையில் தரக்குறைவாகப் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது எனவும், இது மட்டும் இன்றி ஆய்வுக் கூடங்களில் செல்லக்கூடிய மருத்துவர்களைக் கூட இவர் அடிக்கடி தரக்குறைவாகப் பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. மேலும் மாவட்ட ஆட்சியர் மருத்துவர்களிடம் விரோத போக்கைக் கைவிட வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டனர்.

மாவட்ட ஆட்சியரை கண்டித்து அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அதோடு இந்த போராட்டம் காரணமாக உள் மற்றும் புறநோயாளிகள் சிறிது நேரம் அவதிக்குள்ளானதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மத்திய அரசோடு இணைந்தால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு நன்மை - பிரேமலதா விஜயகாந்த்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.