ETV Bharat / state

8 குழந்தைகளுடன் வறுமையில் வாடிய குடும்பத்திற்கு உதவிய விஜய் ரசிகர்கள்

author img

By

Published : Jun 24, 2021, 1:57 PM IST

விஜய் ரசிகர்கள்
விஜய் ரசிகர்கள்

திருவள்ளூர்: எட்டு குழந்தைகளுடன் வறுமையில் வாடும் குடும்பத்தைத் தத்தெடுத்து விஜய் மக்கள் இயக்கத்தினர் உதவி செய்துவருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் நாராயணபுரம் கிராமத்தில், இருளர் இன மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்துவருகின்றனர். இவர்களில் கைம்பெண் ஒருவர் ஆறு பெண் பிள்ளைகள், இரண்டு ஆண் பிள்ளைகளுடன் வறுமையால் சிரமப்பட்டு வாழ்ந்துவருகிறார். இது குறித்து விஜய் மக்கள் இயக்கத்தினருக்குத் தெரியவந்துள்ளது.

உடனே நடிகர் விஜய்யின் பிறந்தநாளில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் அக்குடும்பத்தைத் தத்தெடுத்துள்ளனர்.

வறுமையில் வாடிய குடும்பத்திற்கு உதவிய விஜய்

அதில் முதல்கட்டமாக தங்களது சொந்த செலவில் வறுமையில் கிடக்கும் அக்குடும்பத்திற்கு, ஒரு மாதத்திற்குத் தேவையான 25 கிலோ அரிசி, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, எண்ணெய், காய்கறிகள், கோதுமை, புளி, உப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் கொண்ட தொகுப்பினை வழங்கினர். இவர்களின் இந்தச் செயலைப் பலரும் பாராட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சியில் உணவு, உடை வழங்கி விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.