ETV Bharat / state

'அணையிலிருந்து வெளியேறிய நீர்; பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்'- தென்காசி வருவாய் கோட்டாட்சியர் விளக்கம்

author img

By

Published : Sep 10, 2019, 5:22 PM IST

தென்காசி வருவாய் கோட்டாட்சியர் பழனிகுமார்

நெல்லை: மேக்கரை அடவிநயினார் அணை உடைந்ததால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் நேராது, யாரும் அச்சமடைய வேண்டாம் என தென்காசி வருவாய் கோட்டாட்சியர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மேக்கரை அடவிநயினார் அணை கடந்த இரு தினங்களுக்கு முன் மதகை திறக்கும் பொழுது எதிர்பாராத விதமாக சேதமடைந்தது. இதில் அதிகளவில் நீர் வெளியேறி, வயல்வெளிகளுக்குள் புகுந்தது. மேலும் மேக்கரை - வடகரை சாலை பலத்த சேதம் அடைந்தது. இது குறித்து பல்வேறு செய்திகள் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் தென்காசி வருவாய் கோட்டாட்சியர் பழனிகுமார் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார்.

அப்போது பேசிய அவர், "2 ஆயிரத்து 147 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் விவசாயிகள் பயன்பாட்டுக்காக கடந்த 28ஆம் தேதி மேட்டுக் கால்வாய் - கரிசல்காட்டு மதகு வழியாக மொத்தம் விநாடிக்கு 20 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில், ஆகஸ்ட் 29ஆம் தேதி மாலை 6 மணிக்கு அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதால், தானாக வழிந்தோடும் வழியாக உபரி நீர் வெளியேறியது.

அதனடிப்படையில், செப்டம்பர் 7ஆம் தேதியன்று மேட்டூர் அணை உதவிப் பொறியாளர் முன்னிலையில் செயற்பொறியாளரின் அறிவுரையின்படி மதகை திறக்கப்பட்டது. அப்போது மதகு இயங்க மிக சிரமமாக இருந்தது. இதனையடுத்து, மீண்டும் 8ஆம் தேதியன்று நண்பகல் 12.30 மணிக்கு மதகு திறக்கப்பட்டது. அப்போது, நீரின் உட்புறமாக அடித்து வரப்பட்ட மரக் கட்டை ஒன்று மதகின் கீழ் பகுதியில் மாட்டிக்கொண்டது. அதனால் மதகு முழுவதுமாக கீழே இயங்காத காரணத்தால், மேட்டுக் கால்வாய் வழியாக விநாடிக்கு 30 கனஅடி நீர் வெளிவந்தது.

அணையில் இருந்து நீர் வெளியேறிய விவகாரம் - தென்காசி வருவாய் கோட்டாட்சியர் விளக்கம்

நீரின் அளவு அதிகரித்ததால் கால்வாயின் பக்கவாட்டு சுவற்றை மீறி நீர் வெளியேறியது. இதனால், நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான தார்ச் சாலையின் ஓரத்தில் கரை அரிப்பு ஏற்பட்டதால், நீர் திறப்பு கட்டுப்படுத்தப்பட்டது.

மேலும், சேதம் அடைந்த கால்வாய்ப் பகுதியில் வாகனங்கள் செல்லாதவாறு மணல் மூட்டைகள் கொண்டு தடுப்பு அமைக்கப்பட்டு, காவல் துறையினர் மூலம் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவை இல்லை" என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்வதாக தென்காசி கோட்டாட்சியர் கூறினார்.

Intro:மேக்கரை அணை உடைந்த விவகாரம் கோட்டாட்சியர் பத்திரிகையாளர்களுடன் திடீர் சந்திப்பு


Body:நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள அடவி நைனார் கோவில் அணை கடந்த இரு தினங்களுக்கு முன் மதகு திறக்கும் பொழுது எதிர்பாராத விதமாக சேதமடைந்து அதிகளவில் நீர் வெளியேறி வயல்வெளிகளுக்கு புகுந்தது மேலும் மேக்கரை வடகரை சாலை பலத்த சேதம் அடைந்தது இது குறித்து பல்வேறு செய்திகள் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் இன்று தென்காசி கோட்டாட்சியர் அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார் 2147 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் விவ சாயிகள் பயன்பாட்டிற்கு கடந்த 28ஆம் தேதி மேட்டுக் கால்வாய் கரிசல்காட்டு மதகு வழியாக மொத்தம் 20 கனஅடி வினாடிக்கு திறந்து விடப்பட்ட நிலையில் அணை அதன் முழு கொள்ளளவை முழுமையாக 29 8 2019 அன்று மாலை 6 மணி அளவில் எட்டி அணையில் உள்ள தானாக வழிந்தோடும் வழியாக உபரி நீர் வெளியேறியது அதனடிப்படையில் 7 9 2019 அன்று மேட்டூர் அணை உதவி பொறியாளர் அவர்கள் முன்னிலையில் செயற்பொறியாளர் அவர்களின் அறிவுரையின்படி திறக்கப்பட்ட நிலையில் அணையின் மதகு இயங்க மிக சிரமமாக இருந்தது மீண்டும் 8 9 2019 அன்று திறக்க முயற்சித்து அதில் சுமார் பன்னிரண்டு முப்பது மணி அளவில் அணையின் மதகு திறக்கப்பட்டது அப்பொழுது உட்புறமாக அடித்து வரப்பட்ட மரக் கட்டை ஒன்று அதற்கு கீழ் பகுதியில் மாட்டிக்கொண்டது அதனால் அது முழுவதுமாக கீழே இயங்கவில்லை இதன் காரணமாக மேட்டுக் கால்வாய் வழியாக 30 கனஅடி வினாடிக்கு வெளிவந்தது இதனால் கால்வாயின் பக்கவாட்டில் சுவற்றின் மேல் வழியாக நீர் வெளியேறியது நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான தார் சாலை ஓரத்தில் கரை அரிப்பு ஏற்பட்டு அங்கிருந்த கல்வெட்டுகள் தொடங்கியதை தொடர்ந்து அணை மதகு இறக்கிவிடப்பட்டு இரவு அதிக நேரம் ஆனதால் தண்ணீர் திறப்பு கட்டுப்படுத்தப்பட்டது இந்நிலையில் மேற்படி கால்வாய் சேதம் அடைந்த பகுதியில் வாகனங்கள் செல்லாதவாறு மணல் மூட்டைகள் கொண்டு தடுப்பு அமைக்கப்பட்டு வருவாய்த் துறை பொதுப்பணித் துறை காவல் துறையினர் மூலம் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவை இல்லை என்ற விபரத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் நிர்வாகத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்வதாக தென்காசி கோட்டாட்சியர் பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்தார்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.