ETV Bharat / state

நெல்லையில் பழமைவாய்ந்த சவேரியார் கல்லூரியை தனியார்மயமாக்க முயற்சி; பேராசிரியர்கள் குற்றச்சாட்டு

author img

By

Published : Dec 23, 2022, 8:14 AM IST

Updated : Dec 23, 2022, 8:40 AM IST

பேராசிரியர்கள் குற்றச்சாட்டு
பேராசிரியர்கள் குற்றச்சாட்டு

நெல்லையில் பழமைவாய்ந்த சவேரியார் கல்லூரியை தனியார்மயமாக்க முயற்சி நடைபெற்று வருவதாக நிர்வாகம் மீது பேராசிரியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கல்லூரி பேராசிரியர்கள் அளித்த பேட்டி

திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என அழைக்கப்படும், நூற்றாண்டு பழமை வாய்ந்த தூய சவேரியார் கல்லூரி அமைந்துள்ளது. அரசு உதவி பெறும் இக்கல்லூரியில், சமீப காலமாக பல்வேறு விதிமீறல்கள் நடைபெறுவதாக பேராசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக துறை தலைவர்கள் பதவி நியமனம் மற்றும் மாணவர் சேர்க்கை விவகாரங்களில் விதிமீறல் உள்ளதாக பேராசிரியர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். இந்நிலையில், தூய சவேரியார் கல்லூரியை தனியார்மயமாக்கும் முயற்சியில் நிர்வாகித்தினர் தீவிரமாக ஈடுபடுவதாக, அக்கல்லூரியின் ஆசிரியர், மாணவர் மற்றும் கல்வி உரிமை பாதுகாப்பு குழுவினர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

இதுகுறித்து அக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமாரசாமி நேற்று (டிசம்பர் 22) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”பாரம்பரியமான தூய சவேரியார் கல்லூரியின் நடவடிக்கைகள், சமீபகாலமாக சாதாரண மக்களுக்கு கல்வி மறுக்கும் சூழல் உள்ளது. கல்லூரியை தனியார் மயமாக்கும் முயற்சியை நிர்வாகம் செய்கிறது.

இது ஒரு அரசு உதவி பெறும் தன்னாட்சி கல்லூரி அரசால் உருவாக்கப்பட்ட கல்லூரி. ஆனால், இங்கு மாணவர் சேர்க்கையில் வெளிப்படைத் தன்மை இல்லை, கல்வி கட்டணமும் அரசு நிர்ணயித்ததை விட அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். சிறுபான்மை அந்தஸ்து பெற்று எல்லா உரிமைகளும் பெறுகிறது, ஆனால் சிறுபான்மை மாணவர்களுக்கு எதிராக செயல்படுகிறது.

தமிழ்நாடு அரசின் அரசாணையை அமல்படுத்தாமல் பேராசிரியர்கள் நியமணம் நடக்கிறது. இதை தட்டி கேட்கும் ஆசிரியர்கள், மாணவர்கள் பழிவாங்கப்படுகிறார்கள். எனவே இந்த கல்லூரி எப்போதும் போல அரசு உதவி பெறும் தன்னாட்சி கல்லூரியாக செயல்பட வேண்டும். மாணவர்கள் சேர்க்கையில் வெளிப்படைத் தன்மை வேண்டும்.

இல்லா விட்டால் பீட்டர் அல்போன்ஸ், வைகோ போன்ற முன்னாள் மாணவர்களை சந்தித்து முறையிடுவோம். தற்போதுள்ள சட்ட விதிகளின்படி கல்லூரியை தனியார் மயமாக்க சாத்தியம் உள்ளது. ஆசிரியர்களின் பங்களிப்பு இல்லாமல் கல்லூரி வளர்ச்சி சாத்தியமில்லை. ஜனநாயகத்தை சொல்லி கொடுக்கும் கல்லூரியில் இதுபோன்று நடந்து கொள்ள கூடாது.

அரசு உதவி பெறுவதால் அதிக நிதி கிடைத்தும், தனியார் மயமானால் மாணவர்களின் சேர்க்கை கட்டணத்தை அதிகரித்து அதிக பணம் பெறலாம் என்ற நோக்கத்தில் தான், தனியார் மயத்தை விரும்புகின்றனர்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: உரிய காலத்தில் பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தர உத்தரவு!

Last Updated :Dec 23, 2022, 8:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.