ETV Bharat / state

வைகை அணையின் நீர்மட்டம் 50 அடிக்கும் கீழ் சரிவு - குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

author img

By

Published : Feb 20, 2020, 1:00 PM IST

வைகை அணை
வைகை அணை

தேனி: வைகை அணையின் நீர்மட்டம் 50 அடிக்கும் கீழ் சரிந்துள்ளதால் மதுரை, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. இந்த அணையானது தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை , இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் பாசன தேவைகளின் முக்கிய நீர் ஆதாரமாகத் திகழ்கிறது. அணையின் மொத்தக் கொள்ளளவு 71அடியாகும்.

இந்நிலையில், கோடை காலம் தொடங்கும் முன்பே, நீர்ப்பிடிப்புப்பகுதிகளில் போதிய மழையின்றி நீர்வரத்து படிப்படியாக குறைந்து, தற்போது நீர்வரத்தின்றி காணப்படுகிறது. இதன் காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 50 அடிக்கும் கீழ் சரிந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 49.61 அடியாகவும், நீர் இருப்பு 1941 மி.கன அடியாகவும் உள்ளது. தற்போது, மதுரை நகர் மக்களின் குடிநீர் தேவைக்காக 60 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்படுகிறது.

வைகை அணையின் நீர்மட்டம் 50 அடிக்கும் கீழ் சரிவு

கோடை வெயில், நீர் வரத்தில்லா வைகை ஆறு, தொடர் நீர் திறப்பு ஆகியவற்றால் வைகை அணையின் நீர்மட்டம் மேலும் குறையக் கூடும் என்பதால், கால்நடைகள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள 5 மாவட்ட மக்களுக்கு குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாக வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: செல்போன் பேசிக்கொண்டே தண்டவாளத்தைக் கடக்க முயற்சி; ரயில் மோதி மாணவர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.