ETV Bharat / state

காவலர்கள் மீது கல்வீச்சு; தேனியில் பரபரப்பு!

author img

By

Published : Jun 15, 2019, 11:41 AM IST

தேனி

தேனி: பெரியகுளம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைக்க முயன்றபோது காவலர்கள் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டதால், காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சருத்துப்பட்டியைச் சேர்ந்த சிரஞ்சீவி, தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று காலை பொம்மிநாயக்கன்பட்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிரஞ்சீவியை தாக்கியுள்ளனர். இதனையடுத்து சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிரஞ்சீவி அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் சிரஞ்சீவியை தாக்கிய நபர்களை கைது செய்யக்கோரி சருத்துப்பட்டியைச் சேர்ந்த பொதுமக்கள் தேனி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள்

தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துசெல்ல அறிவுறுத்தியுள்ளனர். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் காவல்துறையினர் மீது கல்வீசி தாக்கியுள்ளனர். இதில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உட்பட 10க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

இந்த கல்வீச்சு தாக்குதலில் காயமடைந்த எஸ்.பி. பாஸ்கரனுக்கு இடதுகண்ணில் பலத்த ஏற்பட்டதையடுத்து, சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு பணியில் காவலர்கள்

மேலும் சருத்துப்பட்டியில் பதற்றமான சூழல் நிலவுவதால், அப்பகுதியில் காவல்துறை உயரதிகாரிகள் உட்பட 300க்கும் மேற்பட்ட காலவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு காரணமானவர்களை தென்மண்டல ஐ.ஜி. டேவிட் ஆசீர்வாதம், தேனி மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, பெரியகுளம் கோட்டாட்சியர் ஜெயப்பரீத்தா ஆகியோர் அலுவலர்கள் தேடி வருகின்றனர்.

Intro: பெரியகுளம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைக்க முயன்ற காவல்துறையினர் மீது கல்வீச்சு. தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உட்பட 10க்கும் மேற்பட்ட போலீசாருக்கு காயம், தென் மண்டல ஐ.ஜி. நேரில் ஆய்வு, பதட்டம் நிலவுவதால் காவல்துறையினர் குவிப்பு
Body: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சருத்துபட்டியைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவர் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காவல்நிலையத்தில் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் இன்று காலை தேவதானப்பட்டி சரகத்திற்குட்பட்ட பொம்மிநாயக்கன்பட்டியில் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அவரை மர்ம நபர்கள் தாக்கியதில் காயம் அடைந்தவர் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதனையடுத்து சிரஞ்சீவியை தாக்கிய மர்ம நபர்களை கண்டு பிடித்து கைது செய்யக்கோரி சருத்துப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் தேனி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் இன்று இரவு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேனி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை கலைந்து செல்லும்படி கூறியுள்ளனர்.
இதனிடையே பொதுமக்கள் கலைந்து சென்று கொண்டிருக்கையில், மர்;ம நபர்கள் சிலர் போலீசார் மீது கல்வீசி தாக்கினர். இதில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உட்பட 10க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்தனர். உடனே அங்கிருந்த போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். காயம் அடைந்த எஸ்பி.பாஸ்கரன் உட்பட போலீசார் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் எஸ்.பி. பாஸ்கரனுக்கு இடது கண் அருகில் பலத்த காயம் உண்டாகி ரத்தம் வடிந்தநிலையில் உள்ளதால், அவரை மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சருத்துப்பட்டி பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால்; சம்பவ இடத்திற்கு தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த காவல்துறை உயரதிகாரிகள் உள்பட சுமார் 300க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தாக்குதலுக்கு காரணமானவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து தென்மண்டல ஐ.ஜி (கூடுதல் பொறுப்பு) டேவிட் தேவாசீர்வாதம், தேனி மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, பெரியகுளம் கோட்டாட்சியர் ஜெயப்பரீத்தா ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Conclusion: எஸ்.பி. உள்பட போலீசார் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தால் சருத்துப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகின்றது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.