ETV Bharat / state

உதகை தாவரவியல் பூங்காவில் கோடை விழா துவங்கியது!

author img

By

Published : May 1, 2019, 10:57 PM IST

நீலகிரி

நீலகிரி: உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று துவங்கிய கோடை விழா , சுற்றுலாப்பயணிகளை கவர்ந்து வருகிறது.

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் துவங்கியுள்ளது. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட்டு இதமான வானிலையையும், இயற்கையையும் ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வருகை தருகின்றனர். சுற்றுலா பயணிகளுக்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இன்று தாவரவியல் பூங்காவில் கோடை விழா துவங்கியது. இதனை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முக பிரியா ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

உதகையில் துவங்கிய கோடை விழா

ஆண்டுதோறும் கோடை விழாவில் துவங்கும் காய்கறி கண்காட்சி, தேர்தல் நன்னடத்தை விதி காரணமாக இன்று துவங்கியது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களிடம் பேசுகையில், கோடைக் காலத்தில் அதிகபடியான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலா பயணிகளுக்காக உதகையின் அனைத்து சுற்றுலா தலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தாமலும், குப்பைகளை போடாமல் தூய்மையாக வைத்துகொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

உதகை                                 01-05-19
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று கோடை விழா மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார். கோடை விழாவின் கலை நிகழ்சிகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.
மலைகளின் அரசி என்று அழைக்கபடும் நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் துவங்கியுள்ளது. சமவெளி பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட்டு இதமான காலநிலையையும் இயற்கையையும் ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். சுற்றுலா பயணிகளுக்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தபடுகிறது. தூவரவியல் பூங்காவில் துவங்கிய கோடை விழாவை  மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முக பிரியா ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். ஆண்டுதோரும் காய்கறி கண்காட்சியில் துவங்கும் கோடை விழாவானது தேர்தல் நன்னடத்தை விதி காரணமாக இன்று துவங்கியது. கோடை விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. படுகர் இனத்தவரின் பாடல்களுக்கு நடனமாடிய மாணவ மாணவிகளை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழச்சியடைந்ததோடு சுற்றுலா பயணிகளும் அவர்களோடு இணைந்து நடனமாடினர். இதனால் அரசு தாவரவியல் பூங்கா விழாகோலம் போல காட்சியளித்தது. மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் பேசும் போது - சுற்றுலா பயணிகளுக்காக அனைத்து சுற்றுலா தலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யபட்டுள்ளதாகவும், வாகன நெரிசலை குறைக்கும் வகையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும, சாலை விதிகளை மதித்து சுற்றுலா பயணிகள் வாகனங்களை ஓட்டவேண்டும் என தெரிவித்தார். மேலும் நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யபட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தாமலும், குப்பைகளை போடாமல் தூய்மையாக வைத்துகொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
பேட்டி : இன்னசென்ட் திவ்யா –  நீலகிரி மாவட்ட ஆட்சியர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.