ETV Bharat / state

கோத்தகிரி அருகே அரசு பேருந்து விபத்து; 20 பேர் காயம்

author img

By

Published : Nov 15, 2022, 2:29 PM IST

குன்னூர் சென்ற அரசு பேருந்து விபத்து
குன்னூர் சென்ற அரசு பேருந்து விபத்து

கோத்தகிரியிலிருந்து - குன்னூர் சென்ற அரசு பேருந்து கட்டுபாட்டை இழந்து தடுப்பு சுவற்றில் மோதியதில் சுமார் 20 பேர் காயம் அடைந்தனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியிலிருந்து-குன்னூருக்கு சென்ற அரசு பேருந்து கோத்தகிரி கேபிஎஸ் கல்லூரி அருகே சென்றபோது ஒட்டுநரின் கட்டுபாட்டை இழந்த எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதி சாலை எதிரே உள்ள மண் சுவற்றில் மோதியது.

இதில் அரசு பேருந்தில் பயணம் செய்த பேருந்து ஒட்டுநர் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

குன்னூர் சென்ற அரசு பேருந்து விபத்து

மேலும் பேருந்தை இயக்கிய ஒட்டுநர் ரகுராதன் மற்றும் இரு சக்கர வாகனத்தில் வந்த மேகந்திரன் ஆகிய இருவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: லிவிங் டூ கெதர் பயங்கரம்: காதலியின் பாகங்களை மீட்க காட்டிற்கு அழைத்து செல்லப்பட்ட காதலன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.