ETV Bharat / state

நீலகிரியில் தொடரும் கனமழை! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

author img

By

Published : Aug 6, 2019, 2:06 PM IST

நீலகிரியில் தொடரும் கனமழை

நீலகிரி: கனமழை தொடர்ந்து பெய்துவருவதால் நீலகிரி மாவட்டத்தின் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட இடங்களிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இரண்டு நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால் குந்தா, கூடலூர், பந்தலூர், அப்பர்பவானி பகுதிகளிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.

நீலகிரியில் தொடரும் கனமழை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக முதுமலையில் சுற்றுலாப் பயணிகளுக்கான யானை சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது. பாண்டியாறு, மங்குழி, பொன்னானி ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆற்றில் இறங்கவோ, கரையோரங்களுக்குச் செல்லவோ கூடாது என வருவாய் மற்றும் தீயணைப்புத் துறையினர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Intro:OotyBody:உதகை 06-08-19
நீலகிரியில் பெய்து வரும் கனமழை. ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கனமழையால் யானை சவாரியும் ரத்து.
நீலகிரி மாவட்டம் உதகை, குந்தா கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுக்கா விற்குட்பட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை பெய்து வருவதால் முதுமலையில் சுற்றுலா பயணிகள் மற்றும் யானைகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு யானை சவாரி ரத்து செய்யப்பட்டுள்ள. கடும் மழையால் பாண்டியாறு, மங்குழி, பொன்னானி ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு விவசாய நிலங்களில் புகுந்ததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர் மழையால் பல பகுதிகள் ஆங்காங்கே சிறிய அளவிளான மண் சரிவு ஏற்பட்டுள்ளது. கூடலூர், பந்தலூர், உதகை, குந்தா பகுதிகளில் தொடர் கன மழையால் பள்ளி கல்லூரிகளுக்கு இரண்டாவது நாளாக விடுமுறை என மாவட்ட ஆட்சியர் இன்னெசன்ட் திவ்யா அறிவித்துள்ளார். மழையுடன் கடுங்குளிர் நிலவி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பேட்டி : வெஸ்லி- உதகை
Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.