நீலகிரி மாவட்டத்தில் இரண்டு நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால் குந்தா, கூடலூர், பந்தலூர், அப்பர்பவானி பகுதிகளிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.
கனமழை காரணமாக முதுமலையில் சுற்றுலாப் பயணிகளுக்கான யானை சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது. பாண்டியாறு, மங்குழி, பொன்னானி ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆற்றில் இறங்கவோ, கரையோரங்களுக்குச் செல்லவோ கூடாது என வருவாய் மற்றும் தீயணைப்புத் துறையினர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.