ETV Bharat / state

உதகையில் 123ஆவது மலர் கண்காட்சி தொடக்கம்

author img

By

Published : May 17, 2019, 12:21 PM IST

Updated : May 17, 2019, 2:08 PM IST

flower exhibition

நீலகிரி: உதகை தாவரவியல் பூங்காவில் 123ஆவது மலர் கண்காட்சியை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் இந்த ஆண்டிற்கான கோடை சீசன் தற்போது களைக்கட்டி உள்ளது. இந்நிலையில், சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் விதமாக உதகை அரசு தாவரவயில் பூங்காவில் 123ஆவது மலர் கண்காட்சியை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று தொடங்கி வைத்தார்.

ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியைக் காண சுமார் ஐந்து லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலர் கண்காட்சியின் சிறப்பு அம்சமாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் கார்னேசியன் மலர்களைக் கொண்டு 22 அடி உயரத்தில் பிரமாண்ட நாடாளுமன்றம் வடிவமைக்கபட்டுள்ளது. 50 ஆயிரம் ரோஜா மலர்களைக் கொண்டு 123ஆவது மலர் கண்காட்சி என்ற வடிவம் உருவாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கபட்டுள்ளது.

உதகையில் 123ஆவது மலர் கண்காட்சி தொடக்கம்

மேலும் மலர் மாடங்களில் 30 ஆயிரம் மலர் தொட்டிகள் காட்சிக்கு வைக்கபட்டுள்ளன. மூன்றாயிரம் ஆர்கிட் மலர்களைக் கொண்டு தொட்டியிலிருந்து பல வண்ண மலர்கள் கொட்டுவது போன்ற மலர் அருவியும், அதன் கீழ் ஐந்தாயிரம் மலர் தொட்டிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றை ஆயிரக்கணக்கான சுற்றலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்துவருகின்றனர். தொடக்க விழாவில் தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

உதகை                                17-05-19
உதகை தாவரவியல் பூங்காவில் 123-வது மலர் கண்காட்சி தொடங்கியது…. தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித் தொடங்கி வைத்தார்…. 1 லட்சத்து 20 ஆயிரம் மலர்களை கொண்டு அமைக்கபட்டுள்ள பிரம்மாண்ட பாராளுமன்ற கட்டிடம், மலர் அருவி உள்ளிட்ட பல்வேறு மலர் அலங்காரங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது….
    உதகையில் இந்த ஆண்டிற்கான கோடை சீசன் தற்போது கலைகட்டி உள்ளது. அதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்த செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் விதமாக உதகை அரசு தாவரவயில் பூங்காவில் 123-வது மலர் கண்காட்சி இன்று தொடங்கியது. இதனை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்த தொடங்கி வைக்கிறார். 5 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை காண சுமார் 5 லட்சம் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.
   மலர் கண்காட்சியின் சிறப்பு அம்சமாக 1 லட்சத்தி 20 ஆயிரம் கார்னேசியன் மலர்களை கொண்டு 22 அடி உயரத்தல் பிரமாண்ட பார்லிமெண்ட் கட்டிடம் வடிவமைக்கபட்டுள்ளது. 50 ஆயிரம் ரொஜா மலர்களை கொண்டு 123-வது மலர் கண்காட்சி என்ற வடிவம் உருவாக்கபட்டு காட்சிக்கு வைக்கபட்டடுள்ளது. மேலும் மலர் மாடங்களில் 30 ஆயிரம் மலர் தொட்டிகள் காட்சிக்கு வைக்கபட்டுள்ளன. 3 ஆயிரம் ஆர்கிட் மலர்களை கொண்டு தொட்டியிலிருந்து பல வண்ண மலர்கள் கொட்டுவது போல மலர் அருவியும், அதன் கீழ் 5 ஆயிரம் மலர் தொட்டிகளும் காட்சிக்கு வைக்கபட்டுள்ளது. இவற்றை ஆயிரக்கணக்கான சுற்றலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். தொடக்க விழாவில் தமிழக தோட்டக்கலைத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங்பேடி, நீலகிரி மாவட்ட ஆட்சிதலைவர் இன்னசென்ட் திவ்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பேட்டி : திவ்யா – சுற்றுலா பயணி (சென்னை)
     : மெர்ஸி – சுற்றுலா பயணி (சென்னை)

Last Updated :May 17, 2019, 2:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.