சோழர் கால ஒற்றை வார்ப்பு முறையில் 23 அடி உயர நடராஜர் சிலை

author img

By

Published : Sep 11, 2022, 9:34 AM IST

Etv Bharat

சோழர் கால ஒற்றை வார்ப்பு முறையில் உருவான 23 அடி உயர நடராஜர் சிலை, தெலங்கானா ஆளுநர் தமிழிசை மூலம் வேலூர் பொற்கோயில் அறங்காவலர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.


தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே திம்மக்குடி அருகே கேஸ்ட் இன் பிரான்ஸ் கிரியேட்டிவ் என்னும் சிற்ப சாலையை வரதராஜ் என்பவர் 24 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்த சிற்ப சாலையில் முக்கால் அடி முதல் 11 அடி உயரம் வரையிலான பல வித சுவாமி சிலைகள் வடிவமைக்கப்படுகின்றன. நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மட்டுமல்லாது, பல வெளிநாடுகளுக்கும், இங்கு செய்யப்படும் சிலைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

குறிப்பாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள 6 அடி உயர தமிழ் தாய் சிலை, ஜெர்மன் நாட்டில் உள்ள தமிழ் சங்க கட்டடத்தில் உள்ள 6 அடி உயர மகாத்மா காந்தி சிலை, ரஷ்ய நாட்டின் மருத்துவ ஆய்வு கழகத்தில் உள்ள 5 அடி உயர நடராஜர் சிலை உள்ளிட்டவை இந்த சிற்ப சாலையில் செய்யப்பட்டவையே. இந்த நிலையில் இங்கு பல கோடி ரூபாய் மதிப்பில் உலகிலேயே மிக உயரமான ஆனந்த தாண்டவ நடராஜர் ஐம்பொன் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. சோழர் கால பாணியில் ஒற்றை வார்ப்பு முறையில் 23 அடி உயரத்தில், 17 அடி அகலத்தில் 15 டன் எடையில் செய்யப்பட்டுள்ளது. இந்த சிலை வேலூர் பொற்கோயிலில் வைக்க செய்யப்பட்டது.

சோழர் கால ஒற்றை வார்ப்பு முறையில் 23 அடி உயர நடராஜர் சிலை

வரும் (செப். 12) ஆம் தேதி இந்த பிரமாண்ட சிலை சிறப்பு அபிஷேகங்களுடன், வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயில் அறங்காவலர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த நிகழ்வில் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநரும் மற்றும் தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்துகொண்டு சிலையை ஒப்படைக்க இருக்கிறார்.

இந்த சிலை நடராஜர் முயலினை மிதித்திக் கொண்டு ஆனந்த தாண்டவம் ஆடுவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு மகரப் பறவைகள், 102 தாமரைப்பூங்கள், 50 பூதகணங்கள், 52 சிங்கங்கள், 34 சர்பங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.


இதையும் படிங்க: ‘தனியார் பொறியியல் கல்லூரிகளில் கட்டணத்தை உயர்த்த வேண்டாம்’ - அமைச்சர் பொன்முடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.