தஞ்சை பெரியகோவிலில் 1008 சங்காபிஷேகம்

author img

By

Published : Nov 22, 2022, 9:03 AM IST

தஞ்சை பெரியகோவிலில் 1008 சங்காபிஷேகம்

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் 1008 சங்காபிஷேகம் மற்றும் பிரதோஷம் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

கார்த்திகை மாதம் திங்கட்கிழமை சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து கார்த்திகை மாத முதல் சோமவாரமான நேற்று(21.11.22) தஞ்சாவூர் பெரிய கோயிலில், பெருவுடையார் சன்னதி முன்பு 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிவலிங்க வடிவில் சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

பின்னர் 1008 சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரால் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. மேலும், இதே நாளில் பிரதோஷம் வந்ததை முன்னிட்டு, மஹாநந்தியம் பெருமானுக்கு மஞ்சள், பால், திரவிய பொடி உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தஞ்சை பெரியகோவிலில் 1008 சங்காபிஷேகம்

சோமவார தினத்தில், பிரதோஷம் என்பதால், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: செஞ்சிலுவைச் சங்க நிர்வாகிகளின் ரூ.3.37 கோடி சொத்துகள் முடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.