ETV Bharat / state

‘தென்காசியில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு’ - போலீஸ் தீவிர விசாரணை!

author img

By

Published : Jun 23, 2023, 12:39 PM IST

Etv Bharat
Etv Bharat

தென்காசியில் பூட்டிய வீட்டிற்குள் கை கால்களை கட்டிலில் கட்டிப்போட்டு, முகம் சிதலமடைந்து அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டது. தொடர்ந்து, காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி நகரப்பகுதியில் உள்ள நடுமாதாங்கோயில் தெருவில் உள்ள சுப்பிரமணியன் என்பவரது வீட்டில சந்திரன் - சித்ரா என்ற தம்பதி கடந்த 10 வருடங்களாக வாடைகைக்கு வசித்து வந்தனர். இந்த நிலையில், அவர்கள் வசித்து வந்த வீட்டில் இருந்து நேற்று (ஜூன் 22) அதிக துர்நாற்றம் வீசியுள்ளது.

உடனே, அக்கம்பக்கத்தில் வசித்து வருபவர்கள் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். பின்னர், தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தென்காசி காவல் துறையினர், துர்நாற்றம் வீசிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது, கட்டிலில் சித்ரா கட்டிவைக்கப்பட்ட நிலையில் முகம் சிதலடைந்து அழுகிய நிலையில் காணப்பட்டுள்ளார். அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல் துறையினர் உடனே தடயவியல் நிபுணர்களை வரவழைத்து சோதனை செய்தனர். தொடர்ந்து, அழுகிய நிலையில் சடலமாக கிடந்த சித்ராவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தென்காசி காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கணவன், மனைவி இருவரும் தனியாக வாழ்ந்து வந்த வீட்டில் மனைவி மட்டும் கை, கால்கள் கட்டப்பட்டு முகம் சிதலடைந்த நிலையில் இறந்து கிடப்பதால், சித்ராவை அவரது கணவர் கொலை செய்திருக்க வாய்ப்புள்ளதாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது. மேலும், சித்ராவின் கணவரான சந்திரனை தற்போது காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: மீண்டும் க்ரைம் சீனுக்கு வந்த வரிச்சியூர் செல்வம்.. தட்டித்தூக்கிய தென் மண்டல ஐஜி.. நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.