ETV Bharat / state

குடும்பப் பிரச்னை காரணமாக மகளைக் கொன்று விட்டு தாயும் தற்கொலை!

author img

By

Published : Mar 30, 2023, 5:09 PM IST

தென்காசி
குடும்பப் பிரச்சனை காரணமாக மகளைக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்துக் கொண்ட தாய்

தென்காசியில், குடும்பப் பிரச்னை காரணமாக தற்கொலைக்கு முயன்றதில், தாயும், ஒரு மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மற்றொரு மகள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தென்காசி: தென்காசி மாவட்டம், செங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர், இராமகிருஷ்ணன். இவர் செங்கோட்டை அருகே உள்ள தேன்பொத்தை பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் முருகேஸ்வரி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து தற்போது இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில், இராமகிருஷ்ணன் கூலி வேலைக்குச் சென்று சிறுக, சிறுக சேமித்து வீட்டில் வைத்திருந்த பணத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு தேடிப் பார்த்தபோது அந்தப் பணம் காணாமல் போய் இருந்துள்ளது. உடனே, இது குறித்து அவரது மனைவியிடம் கேட்டுள்ளார். அப்பொழுது, அந்தப் பணத்தை முருகேஸ்வரி தான் எடுத்ததாகவும் அதை அருகிலுள்ள ஒரு சிலர் கேட்டதால் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த இராமகிருஷ்ணன் அவசரத் தேவைக்காக நான் சிறுக, சிறுகச் சேமித்து வைத்தத் தொகை எப்படி 'நீ எடுத்துக் கொடுப்பாய்?' என்று கூறி முருகேஸ்வரியிடம் பிரச்னையில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், முருகேஸ்வரி கோபத்தில் கணவரிடம் சண்டை போட்டுவிட்டு தனது தகப்பனார் வீட்டிற்குச் சென்ற நிலையில், நேற்று முன்தினம் சமாதானம் செய்து அவரது உறவினர்கள் இராமகிருஷ்ணன் வீட்டில் விட்டுச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், இன்று வழக்கம் போல் முருகேஸ்வரி தனது கணவருக்கு உணவு சமைத்துக் கொடுத்து விட்டு காலையில் வேலைக்கு அனுப்பிய சூழலில், வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து வீட்டின் கதவைப் பூட்டி விட்டு, தனது இரு மகள்களை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்துள்ளார். முருகேஸ்வரி மற்றும் அவரது மூத்த மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சூழலில், அவரது மற்றொரு மகள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்த நிலையில், இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் பலியான முருகேஸ்வரி மற்றும் அவரது மகளின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின், போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குடும்பப் பிரச்னை காரணமாக தனது மகளைக் கொலை செய்து விட்டு தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை எண்ணத்தைக் கைவிடுக
தற்கொலை எண்ணத்தைக் கைவிடுக

இதையும் படிங்க: வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் கொண்டாட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இதையும் படிங்க: "உன்னை ஒன்னும் செய்யமாட்டேன் வாடா" - மாணவனை கூப்பிட்டு அட்வைஸ் கொடுத்த கலெக்டர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.