காரைக்குடியில் ராமநாதன் செட்டியார் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கிவருகிறது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக படிப்பு, கட்டமைப்பு வசதிகள் நிறைந்த இப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவருகின்றனர்.
தற்போது, ஐஎஸ்ஓ தரச்சான்றையும் இப்பள்ளி பெற்றுள்ளது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் தலைமைப் பண்பை வளர்ப்பதற்காகவும், சேவை மனப்பான்மையை ஊக்குவிப்பதற்காகவும் 'இன்ராக்ட்' (INTERACT) சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.
தலைமை ஆசிரியர் பீட்டர் ராஜா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், ஏராளமான மாணவர்கள் இன்ராக்ட் சங்க உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர்.