ETV Bharat / state

சாலை பாதுகாப்புச் சட்டம் இயற்றக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Jan 29, 2020, 4:49 PM IST

protest in salem to bring Road Safety Act
protest in salem to bring Road Safety Act

சேலம்: சாலை விபத்துகளை குறைக்க தமிழ்நாடு சாலை பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி தமிழ் பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது.

தமிழ்நாட்டில் அன்றாடம் சாலை விபத்துகள் அதிகரித்துவருகின்றன. குறிப்பாக விபத்துகள் அதிகம் நடக்கும் மாநிலத்தில் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது.

இதுபோன்ற விபத்துகளை குறைக்க வலியுறுத்தி தமிழ் பண்பாட்டு கழகத்தின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை விபத்துகளை குறைக்க தமிழ்நாடு சாலை பாதுகாப்பு சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக ஏற்றவேண்டும் எனவும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ள சாலைகளில் மக்கள் பாதுகாப்பாக நடந்து செல்வதற்கு நடைபாதை அமைக்க வேண்டும் எனவும் தமிழ்நாட்டில் சாலை விபத்துகளிலிருந்து மக்களை காக்க தமிழ்நாடு சாலை பாதுகாப்பு படை என்ற அமைப்பை உருவாக்க வேண்டும் அதில் 50 ஆயிரம் சாலை பாதுகாப்பு படை வீரர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பண்பாட்டு கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்பாட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட தமிழ் சாலை பண்பாட்டு கழகத்தினர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: தஞ்சை பெரிய கோயில் வழி சுவர்: ஓவியம் வரைந்த மாணவர்கள்!

Intro:சாலை விபத்துக்களை குறைக்க தமிழ்நாடு சாலை பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி தமிழ் பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.


Body:தமிழ்நாட்டில் அன்றாட சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக விபத்துக்கள் அதிகம் நடக்கும் மாநிலத்தில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது விபத்துக்களை குறைக்க வலியுறுத்தி தமிழ் பண்பாட்டு கழகத்தின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை விபத்துகளை குறைக்க தமிழ்நாடு சாலை பாதுகாப்பு சட்டம் தமிழ்நாடு அரசு உடனடியாக ஏற்றவேண்டும் தமிழகத்தில் உள்ள அனைத்து பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி உள்ள சாலைகளில் மக்கள் பாதுகாப்பாக நடந்து செல்வதற்கு நடைபாதை அமைக்க வேண்டும், தமிழகத்தில் சாலை விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது தமிழக மக்களை காக்க தமிழ்நாடு சாலை பாதுகாப்பு படை என்ற அமைப்பை உருவாக்க வேண்டும் இதில் 50 ஆயிரம் சாலை பாதுகாப்பு படை வீரர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர் தம்பையா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட தமிழ் சாலை பண்பாட்டு கழகத்தினர் கலந்துகொண்டனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.