ETV Bharat / state

கொலைக் குற்றவாளி கரோனா சிகிச்சையின்போது மருத்துவமனையில் இருந்து தப்பியோட்டம்

author img

By

Published : Sep 21, 2020, 1:10 PM IST

Accused escape
Accused escape

சேலம்: கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கைதி தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அருகே மல்லூரில் கடந்த 18ஆம் தேதி அன்று லட்சுமி(60) என்ற பெண் சந்தேகத்திற்குரிய முறையில் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து மல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

லட்சுமி கொலைச் சம்பவம் தொடர்பாக கிடைத்த தடயங்களின் அடிப்படையில் நரேஷ் குமார் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். நரேஷ் குமாருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டபோது, அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலை ( செப்.21) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நரேஷ்குமார் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவமனைக்கு விரைந்த காவல் துறையினர், தப்பி ஓடிய நரேஷ் குமாரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் நரேஷ்குமார் மீது குற்ற வழக்குகள் உள்ளதால் காவல் துறையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: திண்டுக்கல்லில் பெண் வெட்டிப் படுகொலை - இளைஞ‌ர் வெறிச் செயல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.