ETV Bharat / briefs

திண்டுக்கல்லில் பெண் வெட்டிப் படுகொலை - இளைஞ‌ர் வெறிச் செயல்!

author img

By

Published : Sep 21, 2020, 5:20 AM IST

திண்டுக்கல்: தேநீர் கடையில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் போதையில் இருந்த இளைஞ‌ர் தகராறில் ஈடுபட்டு, அவரை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Arrest
Arrest

திண்டுக்கல் அருகே செட்டிநாயக்கன்பட்டியில் மீனாட்சி என்ற 50 வயது மதிக்கத்தக்க பெண் அப்பகுதியில் தேநீர் கடை நடத்தி வந்துள்ளார். அங்கு புகையிலை, போதைப் பொருட்களையும் விற்பனை செய்து வந்திருக்கிறார்.

செப்டம்பர் 19ஆம் தேதி இரவு இவர் கடையை மூடிவிட்டு கடையிலேயே வழக்கம்போல் உறங்கி கொண்டிருந்தார்.

அப்போது, டேவிட் நகரைச் சேர்ந்த பிரதீஸ் (19) என்ற இளைஞர் போதையில் கடைக்கு வந்து பாக்கு கேட்டுள்ளார். கடையை மூடியதால், அப்பெண் இப்போது தர முடியாது என்று கூறியுள்ளார். அதற்கு அந்த இளைஞர் அவரிடம் தகராறு செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து எதிர்பாராதவிதமாக அங்கிருந்த அரிவாளை எடுத்து மீனாட்சியை சரமாரியாக வெட்டுப் படுகொலை செய்தார்.

அலறல் சத்தம் கேட்டு எழுந்து வந்த அக்கம்பக்கத்தினர் தப்பி ஓட முயன்ற பிரதீஸை பிடித்து, அவரது கை, கால்களை கட்டிப்போட்டனர். உடனடியாக இதுதொடர்பாக தாடிக்கொம்பு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர், இறந்துபோன மீனாட்சியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த பிரதீஷை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.