ETV Bharat / state

கிராம சபைக் கூட்டத்தில் இடுகாடு தகராறு: பெண் மீது கல்வீச்சு

author img

By

Published : Jan 26, 2020, 10:26 PM IST

Updated : Jan 26, 2020, 11:39 PM IST

சேலம் கிராம சபை கூட்டம் இடுகாடு தகராறு  சேலம் கிராம சபை கூட்டம் தகராறு  கொண்டப்பநாயக்கன்பட்டி கிராம சபை கூட்டம்  Salem Grama Sabha Meeting Issue  Salem Grama Sabha Meeting  Kondappanayakanpatti Grama Sabha Meeting
Kondappanayakanpatti Grama Sabha Meeting

சேலம்: கொண்டப்பநாயக்கன்பட்டியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் இடுகாடு தகராறில் பெண் மீது கல் வீசியதால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் அருகேயுள்ள கொண்டப்பநாயக்கன்பட்டியிலுள்ள சத்யா நகரில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட இந்துக்கள், 100-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் வசித்துவருகின்றனர். இப்பகுதியில், கடந்த 18 வருடங்களாக இந்துக்கள் பயன்படுத்திவந்த இடுகாட்டை கிறிஸ்தவர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம் என சேலம் வருவாய்த் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்து.

சில நாள்களுக்கு முன் இந்த இடுகாட்டில் கிறிஸ்தவர்கள் சவத்தை புதைக்கச் சென்றபோது இந்துக்கள் தடுத்துவிட்டனர். இந்நிலையில், இன்று சத்தியா நகரில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அப்பகுதியைச் சேர்ந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். அப்போது அரசு சார்பில் கொடுக்கப்பட்ட இடுகாட்டில் எங்களுக்கும் இடமளிக்க வேண்டுமென கிறிஸ்தவர்கள் தெரிவித்தற்கு இந்துக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதனால் கிராம சபைக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் கூட்டத்திலிருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கிறிஸ்தவ பெண் மீது கல்லை எறிந்ததால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக அரசு அலுவலர்கள் கன்னங்குறிச்சி காவல் துறையினரை வரவழைத்து கிறிஸ்தவர்களை வெளியேற்றினர்.

கிராம சபைக் கூட்டத்தில் இடுகாடு தகராறு

இதையடுத்து, கிராம சபைக் கூட்டம் ஒரு மணி நேர தாமத்திற்கு பின் மீண்டும் தொடங்கி நிறைவுபெற்றது. இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்துக்கள் தங்கள் பகுதி இடுகாட்டில் கிறிஸ்தவர்களைப் புதைக்க அனுமதிக்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:

கூட்டுறவுச் சங்க மோசடி: ஊழியர்கள் உயர்மட்ட குழு விசாரணை கோரிக்கை

Intro:சேலம் கொண்டப்பநாயக்கன் பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் இரு தரப்பினரும் ஒரே இடுகாட்டினை பயன்படுத்துவோம் என தெரிவித்தால் இரு தரப்பினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மற்றொரு தரப்பு பெண் மீது சிறிய கல்லை எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.Body:
சேலம் அருகே உள்ள கொண்டப்பநாயக்கன் பட்டியிலுள்ள சத்யா நகரில் 5000க்கும் மேற்பட்ட இந்துக்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட கிருத்துவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள இடுகாட்டிமை 18 வருடங்களாக இந்துக்கள் பயன்படுத்தி வந்ததை கிருத்துவர்களும் பயன்படுத்தி கொள்ளலாம் என சேலம் வருவாய் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்து. சில தினங்களுக்கு முன் இந்துக்கள் பயன்படுத்திய இடுகாட்டில் கிருத்துவர்கள் சவத்தை புதைக்க சென்ற போது இந்துக்கள் தடுத்துவிட்டனர். இந்நிலையில் இன்று சத்தியா நகரில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து அபகுதியை சார்ந்த இந்துக்கள் மற்றும் கிருத்துவர்கள் கலந்து கொண்ட போது அரசு சார்பில் கொடுக்கப்பட்ட இடுகாட்டில் எங்களுக்கும் இடமளிக்க வேண்டுமென கிருத்துவர்கள் தெரிவித்தற்கு இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில் கூட்டத்தில் இருந்த மர்ம நபர் கிருத்துவ பெண் மீது சிறிய கல்லை தூக்கி போட்டதால் இரு தரப்பினரிடையே வாக்கு வாதம் முற்றி கைகலப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டதால். அரசு அதிகாரிகள் கன்னங்குறிச்சி போலீசாரை வரவழைத்து கிருத்துவர்களை வெளியேற்றினர். இதனையடுத்து கிராம சபை கூட்டம் ஒரு மணி நேர தாமத்திற்கு பின் மீண்டும் தொடங்கி நிறைவு பெற்றது. இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்துக்கள் தங்கள் பகுதி இடுகாட்டில் கிருத்துவர்களை புதைக்க அனுமதிக்க மாட்டோம் என இந்துக்கள் தெரிவித்துள்ளனர்.


பேட்டி- 1. சுரேஷ் (சத்யா நகர் )

2. ரவி (சத்யா நகர் )

visual send mojo Conclusion:
Last Updated :Jan 26, 2020, 11:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.