ETV Bharat / state

ஜிஎஸ்டி வருவாயில் சாதனை படைத்த சேலம் மண்டலம்... விழா எடுத்து கொண்டாட்டம்!

author img

By

Published : Jul 1, 2023, 9:03 PM IST

ஜிஎஸ்டி வருவாயில் முனைப்பு காட்டிய சேலம் மண்டலம்
ஜிஎஸ்டி வருவாயில் முனைப்பு காட்டிய சேலம் மண்டலம்

சேலம் மண்டலத்தில் ஜிஎஸ்டி வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஜி.எஸ்.டி தின விழாவில் சேலம் மண்டல ஜிஎஸ்டி ஆணையர் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி வருவாயில் முனைப்பு காட்டிய சேலம் மண்டலம்

சேலம்: ஜிஎஸ்டி வரி செலுத்துவோர் எண்ணிக்கை சேலம் மண்டலத்தில் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில், 110 சதவீதமாக அதிகரித்துள்ளதாக சேலம் மண்டல ஜிஎஸ்டி ஆணையர் ராமகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவடைந்ததை ஓட்டி, ஜிஎஸ்டி தினம் இன்று(ஜூலை 1) கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், சேலம் அணேமேடு பகுதியில் உள்ள மண்டல ஜிஎஸ்டி ஆணையரக வளாகத்தில் ஜி.எஸ்.டி தின விழா கொண்டாடப்பட்டது.

சேலம் மண்டல ஜிஎஸ்டி ஆணையர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில், தெற்கு ரயில்வே சேலம் மண்டல கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா சிறப்பு விருந்தினராக நிகழ்வில் கலந்து கொண்டார். மேலும், மாநில ஜிஎஸ்டி இணை ஆணையாள ஜெயராமன், JSW ஸ்டீல் பொது மேலாளர் (நிதி மற்றும் நிர்வாகம்) இளங்கோ மற்றும் பல்வேறு வர்த்தக பிரமுகர்கள், தணிக்கையாளர்கள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள், வணிகர்கள் என பலர் இந்த விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர். விழாவில் சேலம் ஆணையர் ராமகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார்.

இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்கள் சந்தித்து பேசுகையில், “இந்த ஆண்டு ஜி.எஸ்.டி தினம் எளிமைப்படுத்தல் மற்றும் பொருளாதார வளர்ச்சியைக் கொண்டாடி வருகிறது. ஜி.எஸ்.டி வரியானது, கடந்த 6 ஆண்டுகளில் தொழில் முனைவோருக்கு தேவையான சீர்திருத்தங்களை சட்டத்தில் உடனுக்குடன் இணைக்க உதவி புரிந்துள்ளது. இது வரை 49 ஜி.எஸ்.டி கவுன்சில் மீட்டிங் நடைபெற்று சட்டம் வரி செலுத்துவோருக்கான நடைமுறைகள் எளிமைப் படுத்தப்பட்டுள்ளது. அரசின் இத்தகைய எளிமை படுத்தப்பட்ட சீர்திருத்தங்களால் ஜி.எஸ்.டி வருவாய், கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூபாய் 1.86 லட்சம் கோடிகள் வருவாய் நாட்டிற்கு கிடைத்துள்ளது.

உண்மையில் இது நல்ல மற்றும் எளிமையான வரி சேகரிப்பு என்பதை மீண்டும் உறுதி செய்து, 'ஒரு நாடு- ஒரு சந்தை-ஒரு வரி" என்ற குறிக்கோளை அடைவதை நோக்கி செல்வதை தெளிவு படுத்துகிறது. ஜிஎஸ் டி வரி அறிமுகப்படுத்தப்பட்ட ஜூலை 2017 ல் வரி செலுத்துவோர் எண்ணிக்கை சுமார் 36000 ஆக இருந்த சேலம் ஆணையக வரி செலுத்துவோர் எண்ணிக்கை, இந்த வருடம் ஜூன் 2023ல் சுமார் 74000 ஆக உயர்ந்துள்ளது. இது ஜி.எஸ்.டி வரி அறிமுகப்படுத்தப்பட்ட கால கட்டத்தில் இருந்து தற்போது சுமார் 110 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சேலம் ஆணையரகத்தின் கடந்த 2017-18 வரி வருவாய், ரூபாய் 1,358.31 கோடியாக இருந்தது. இந்த வருவாய் கடந்த 2022-23 ஆம் ஆண்டில் ரூபாய் 3162.85 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த 2017-18ல் வசூல் செய்யப்பட்ட ஜி.எஸ்.டி வரி வருவாயினை விட 132 சதவீத உயர்வாகும். வணிகர்கள் மற்றும் வியாபாரிகளை தொடர்பு கொள்ளும்போது OIN எண் கட்டாயமாக குறிக்கப்படுகிறது. அலுவலக தொடர்புகள் கையேடுகள் இல்லாமல் நூறு சதவிகிதம் E-oma முறையில் மட்டுமே நடைபெறுகிறது” என பயன்படுத்தப்படும் முறை மற்றும் வரி வருவாய் குறித்து கூறினார்.

முன்னதாக பேசிய அவர், “வணிக பெருமக்களுக்கு ஆதரவாக அரசும், 49 முறை GST கவுன்சில் கூட்டங்களை நடத்தியது. மேலும் அதுப்பற்றிய அறிவிப்பு, சுற்றறிக்கை மற்றும் செய்திகளை உடனுக்குடன் வெளியிட்டு வணிகர்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுள்ளது. வரி சம்மந்தப்பட்ட நடைமுறைகள் மாறும்பொழுது பல்வேறு வலைத்தள கூட்டங்கள், கருத்தரங்குகள், மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகள் மூலமாக வணிகர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டு விளக்கப்படுகிறது. அவர்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் நமது அலுவலகத்தில் உள்ள ஜிஎஸ்டி மையம் மூலமாக சரியான விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன” என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியை ஒட்டி நடைபெற்ற திறனறிவு போட்டிகள் மற்றும் நடப்பாண்டில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கும், உலக ரத்த தான தினத்தில் ரத்த தானம் செய்த அலுவலர்களுக்கும் பிற அலுவலர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும் இந்த விழாவில் சிறப்பாக செயல்பட்ட தொழில் முனைவோர் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் அனைத்து தரப்பட்ட தொழில் முனைவோர்கள், ஏற்றுமதியாளர்கள், சிறு மற்றும் குறுந் தொழில் முனைவோர்கள், வணிகர்கள், வியாபாரிகள், மத்திய & மாநில பணிபுரியும் அதிகாரிகள், ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இதையும் படிங்க: நாடாளுமன்ற மழைக் கால கூட்டம்... காங்கிரஸ் வியூகம் என்ன? சோனியா தலைமையில் ஆலோசனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.