ETV Bharat / state

அரசின் உத்தரவை மீறி நடைபெற்ற கூட்டுறவு வங்கியின் கட்டுமான பணிகள்!

author img

By

Published : Jul 13, 2020, 12:25 PM IST

Construction work of Co-operative Bank in violation of government order - Public Question!
Construction work of Co-operative Bank in violation of government order - Public Question!

சேலம்: உடையாப்பட்டி அருகே முழு ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் கட்டுமான பணிகளை சேலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது.

கரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுக்கும் விதமாக தமிழ்நாட்டில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு முடிந்து ஜூலை 1 முதல் 31ஆம் தேதி வரை ஆறாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஊரடங்கில் ஜூலை மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் எந்த ஒரு தளர்வும் இல்லாமல், முழு ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது .

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி சேலம் மாவட்டம் உடையாப்பட்டி பகுதியிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், கட்டுமான பணிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிங்க: கர்ப்பிணிகளுக்கு தனி பிரசவ வார்டு - மருத்துவர்கள் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.