மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவர் கைது

author img

By

Published : Sep 25, 2021, 9:02 PM IST

மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவர் கைது

ராமநாதபுரம் அருகே மனைவி தூங்கும்போது அவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ராமநாதபுரம்: முதுகுளத்தூர் அருகேவுள்ள ஏனாதி கிராமத்தைச் சேர்ந்தவர் மாடசாமி (31). இவர் தனியார் வாடகை வேன் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராதிகா (26). இவர்களுக்கு 6 வயதில் மகள் இருக்கிறாள். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராதிகா தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். பின்னர், உறவினர்கள் சமாதானம் செய்ததையடுத்து கணவருடன், ராதிகா சேர்ந்து குடும்பம் நடத்தி வந்தார்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு ராதிகாவின் கழுத்தில் அணிந்திருந்த தாலியை யாரோ அறுத்துச் சென்று விட்டனர். இது குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

மனைவியை கொன்ற கணவர்

இந்நிலையில் மீண்டும் தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. மனைவியின் நடத்தையில் மாடசாமிக்கு சந்தேகம் வலுத்தது. இதனால், நேற்றிரவு (செப்.24) ராதிகா வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மாடசாமி, ராதிகா கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், ராதிகாவின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக கணவர் மாடசாமியை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: போதையில் தகராறு: மனைவியைக் கத்தியால் குத்தியவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.