ETV Bharat / state

பைக் திருட்டு: குற்றவாளியை வலைவீசி தேடும் காவல் துறை

author img

By

Published : Apr 24, 2021, 7:14 PM IST

காவல் நிலையம்
காவல் நிலையம்

ராமநாதபுரம்: முதுகுளத்தூரில் இருசக்கர வாகனம் திருட்டு தொடர்பாக சிசிடிவி காட்சிகளை வைத்து காவல் துறையினர் குற்றவாளியைத் தேடிவருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மேலசத்திரம் கிராமத்தைச் சேர்ந்த துரைமுருகன் என்பவர் முதுகுளத்தூர் ஒன்றிய அலுவலகம் எதிரில் இரும்புக் கடை நடத்திவருகிறார்.

இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தை தனது கடையின் முன்பாக சாவியுடன் நிறுத்திவிட்டு கடைக்குள் சென்று வேலை பார்த்துக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அடையாளம் தெரியாத நபர் கடைக்கு முன்பாக நின்றுகொண்டிருந்த இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்றுள்ளார்.

இதையடுத்து துரைமுருகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதுகுளத்தூர் காவல் துறை வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்ற நபரைத் தேடிவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.