ETV Bharat / state

இறந்தவரின் உடலை வாங்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறவினர்கள்!

author img

By

Published : Oct 10, 2020, 9:57 PM IST

relatives-involved-in-the-controversy-refused-to-buy-the-body-of-the-deceased
relatives-involved-in-the-controversy-refused-to-buy-the-body-of-the-deceased

புதுக்கோட்டை: அன்னவாசல் அருகே இறந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சிறிது பரபரப்பான சூழல் நிலவியது.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகேவுள்ள பின்னங்குடியைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி பொன்னம்மாள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்தநிலையில் இறந்தவரின் இறுதி ஊர்வலத்தின்போது அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் தரப்பிற்கும், தர்மராஜ் என்பவரின் தரப்பிற்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.

இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில் பெரியசாமி (23), தர்மராஜ் (35) உள்ளிட்ட 4 பேர் படுகயமடைந்தனர். இதில் பெரியசாமி திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார். இதுகுறித்து இருதரப்பும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் அன்னவாசல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிவசாமி, பாஸ்கர், ராஜா ஆகிய 3 பேரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பெரியசாமி, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உறவினர்கள் கொலைக்கு காரணமான மீதமுள்ள குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும், இல்லையென்றால் பெரியசாமியின் உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி அன்னவாசல் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் தகவலறிந்து வந்த இலுப்பூர் காவல் துறையினர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:பாண்டிகோயிலில் நிகழ்ந்த கொடூர கொலை! குற்றவாளிகளை தேடுகிறது போலீஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.