ETV Bharat / state

பிரபல ரவுடி கழுத்தறுத்துக் கொலை: தொடரும் ரத்தவெறி! பக்... பக்... பெரம்பலூர்!

author img

By

Published : Jun 8, 2020, 9:23 AM IST

Updated : Jun 8, 2020, 11:28 AM IST

murder
murder

பெரம்பலூர்: நேற்றிரவு (ஜூன் 7) பிரபல ரவுடி பெரம்பலூர் நகரில் கழுத்தறுத்துக் கொலைசெய்யப்பட்டார். தொடரும் கொலைச் சம்பவங்களால் பெரம்பலூர் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் திருநகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் வீரமணி (27) தினசரி காய்கறிச்சந்தையில் கூலித் தொழிலாளியாக வேலை செய்துவந்தார். இவர் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் நேற்றிரவு (ஜூன் 7) வீட்டிலிருந்த வீரமணியை சிலர் அழைத்துச் சென்றுள்ளனர். நீண்ட நேரமாகியும் வீரமணி திரும்பாததால் அவரது பெற்றோர் அவரைத் தேடிச்சென்றனர்.

அப்போது, அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் அருகே வீரமணி கழுத்தறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அதனைக் கண்ட பெற்றோர் கதறி அழுதனர்.

வீரமணி
வீரமணி

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வீரமணியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் காவல் துறையினர் வழக்குப்பதிந்து வீரமணியைக் கொலைசெய்தது யார், எதற்காகக் கொலைசெய்யப்பட்டார்? எனத் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

பெரம்பலூரில் தொடர் கொலைச் சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க:

ரவுடி கழுத்தறுத்துக் கொலை: பெரம்பலூரில் பரபரப்பு!

பெரம்பலூரில் அமுமுக பிரமுகர் வெட்டிக் கொலை: கும்பல் வெறிச்செயல்

Last Updated :Jun 8, 2020, 11:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.