ETV Bharat / state

ரவுடி கழுத்தறுத்து கொலை: பெரம்பலூரில் பரபரப்பு!

author img

By

Published : Jun 2, 2020, 3:13 AM IST

Updated : Jun 2, 2020, 12:34 PM IST

kabilan rowdy murder
kabilan rowdy murder

பெரம்பலூர்: கபிலன் என்ற ரவுடி சாலையின் நடுவே கழுத்தறுத்துக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் நகர்ப் பகுதியில் துறைமங்கலம் கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் கபிலன் (27). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், கபிலன் துறைமங்கலம் கிராம நிர்வாக அலுவலகம் அருகே நேற்று நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அவரை சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு தப்பியோடினர்.

கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிருக்காகப் போராடிய கபிலனைக் கண்டவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவினையாக, சிகிச்சைப் பலனின்றி கபிலன் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பெரம்பலூர் காவல் துறையினர் கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

சாலையின் நடுவே ரவுடி கழுத்தறுத்து கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : அமெரிக்கா இனப்பாகுபாடு காட்டுகிறது - சீனா குற்றச்சாட்டு

Last Updated :Jun 2, 2020, 12:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.