பெரம்பலூரில் 2 பெண் குழந்தைகளுடன் தாய் தற்கொலை

author img

By

Published : Jan 28, 2023, 1:41 PM IST

பெரம்பலூரில் இரட்டை பெண் குழந்தைகளுடன் தாய் தற்கொலை!

பெரம்பலூர் அருகே பென்னகோணத்தில் இரட்டை பெண் குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர்: பெண்ணகோணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயா(27) தம்பதி. இவரது கணவர் விஜய் துபாயில் வேலை பார்த்து வருகிறார். ஜெயா, தனது 2 வயதான இரட்டை பெண் குழந்தைகளுடன் கடலூர் மாவட்டம் ராமநத்தம் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். ஒரு வாரத்திற்கு முன்பு பெண்ணகோணத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு ஜெயா வந்துள்ளார்.

தற்கொலையை தவிர்த்து துணிந்து வாழ்
தற்கொலையை தவிர்த்து துணிந்து வாழ்

இன்று (ஜனவரி 28) காலை ஜெயா தங்கியிருந்த அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்காமல் பூட்டியே இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் எவ்வளவு அழைத்தும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் அறையின் கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது இரட்டை பெண் குழந்தைகள் உடன் ஜெயா தற்கொலையால் உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மங்களமேடு காவல் துறையினர், 3 உடல்களையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை சம்பவம் நிகழ்ந்ததாக காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: பாலியல் வழக்கில் முதியவருக்கு 27 ஆண்டுகள் சிறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.