ETV Bharat / state

பாலியல் வழக்கில் முதியவருக்கு 27 ஆண்டுகள் சிறை

author img

By

Published : Jan 28, 2023, 10:33 AM IST

போக்சோ
போக்சோ

பாலியல் வழக்கில் முதியவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தஞ்சாவூர்: மெலட்டூர் பகுதியை சேர்ந்த 62 வயது முதியவர், அதே பகுதியில் கடை வைத்து நடந்திவந்துள்ளார். 2021ஆம் ஆண்டு இவருடைய கடைக்கு வந்த 16 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதகுறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவிக்கவே, அவர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில், பாபநாசம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தஞ்சை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சுந்தர்ராஜன் நேற்று (ஜன 27) தீர்ப்பளித்தார்.

அதில் முதியவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அதோடு அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு மற்றும் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் அரசு தரப்பில் நிவாரண தொகை வழங்கவும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: இன்ஸ்டாகிராம் காதலால் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.